உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாக். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவரால் அதிர்ச்சி | Telangana man arrested | NIA | Terroris

பாக். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவரால் அதிர்ச்சி | Telangana man arrested | NIA | Terroris

தெலங்கானாவின் வாரங்கல் மாவட்டம் அனுமகொண்டாவில் சகோதரர்கள் இருவருடன் வசிப்பவர் ஜக்ரியா. 25 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த ஜக்ரியா குடும்பத்தினர், முதலில் ஆந்திரா குண்டூரில் வசித்தனர். பின்னர் கடந்த 20 ஆண்டுகளாக அனுமகொண்டாவில் வசித்து வரும் நிலையில், அங்கு பிரியாணி கடை நடத்துகின்றனர். ஜக்ரியாவுக்கு 2 மனைவிகள் 10 பிள்ளைகள் உள்ள நிலையில், இவருக்கு பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதை என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பாகிஸ்தானில் உள்ள கலீஃபா எனும் தீவிரவாத அமைப்பின் இந்தியா தலைவராக ஜக்ரியா இருப்பதும் தெரிந்தது. கலீஃபா அமைப்பின் தலைவர் சமீபத்தில் இறந்ததால், புதிய தலைவரை தேர்வு செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்க ஜக்ரியா இலங்கை செல்ல இருப்பதையும் அதிகாரிகள் உறுதி செய்தனர். இலங்கை செல்ல முயன்ற ஜக்ரியாவை சென்னை ஏர்போர்ட்டில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். அவரை தங்கள் கஸ்டடியில் வைத்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். ஜக்ரியா கைதான விஷயம் வாரங்கல் முழுதும் பரவியது. பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் தங்களுடன் வசித்ததை நினைத்து அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

ஜன 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை