கல்வீச்சின் பின்னணி என்ன? திருப்பத்தூரில் பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம் அம்பூர்பேட்டையை சேர்ந்தவர் ஸ்ரீதர். திமுக மாவட்ட மீனவரணி அமைப்பாளர். இவருக்கும் இவருடைய உறவினர் குடும்பத்திற்கும் நிலப்பிரச்னை உள்ளது. இவர்களுக்குள் அடிக்கடி மோதல்ஏற்பட்டு வந்தது.. இந்நிலையில் ஸ்ரீதரின் உறவினர் மகன் மணிகண்டன் டூவீலரில் வந்து ஶ்ரீதர் வீட்டின் மீது கல் வீசினார். இதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. உறவினர் மற்றும் கல்வீசிய மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க கோரி வாணியம்பாடி போலீசில் ஶ்ரீதர் புகார் அளித்தார்.
ஆக 14, 2024