/ தினமலர் டிவி
/ பொது
/ திருவண்ணாமலையில் நிலச்சரிவு ; இனி தற்காப்பது எப்படி! | Tiruvannamalai | Tiruvannamalai Landslide
திருவண்ணாமலையில் நிலச்சரிவு ; இனி தற்காப்பது எப்படி! | Tiruvannamalai | Tiruvannamalai Landslide
வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் நவம்பர் 30ல் கரையை கடந்தது. இதன் காரணமாக பெய்த அதிகனமழையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் கிழக்கு பக்கத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. வஉசி நகர் பகுதியில் மண் சரிவு, வெள்ளம் காரணமாக வீடுகள் புதைந்ததில் ஐந்து குழந்தைகள் உள்ளிட்ட ஏழு பேர் இறந்தனர். பொதுவாக இமயமலையை ஒட்டிய பகுதிகளில் தான் மழை காலங்களில் நிலச்சரிவு ஏற்படுவது வழக்கம். சில மாதங்களுக்கு முன் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பேரிடராக பார்க்கப்பட்டது. தமிழகத்தில் நீலகிரியில் அதி கனமழை காலங்களில் நிலச்சரிவு சம்பவங்கள் நடந்துள்ளன.
டிச 04, 2024