/ தினமலர் டிவி
/ பொது
/ தண்டவாளத்தில் சுத்தம் செய்தபோது நடந்த விபரீதம்|Train accident|4 Sanitary workers|Palakkad| Kerala
தண்டவாளத்தில் சுத்தம் செய்தபோது நடந்த விபரீதம்|Train accident|4 Sanitary workers|Palakkad| Kerala
கேரளாவின் பாலக்காடு அருகே பாரதபுழா ஆற்றின் மீது அமைந்துள்ள ஷோரனூர் ரயில் பாலத்தில் தமிழகத்தை சேர்ந்த 4 ஒப்பந்த தொழிலாளர்கள் குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, டில்லியில் இருந்து கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் திருவனந்தபுரம் நோக்கி வேகமாக வந்தது. உடனடியாக தண்டவாளத்தில் இருந்து வெளியேற முடியாமல், பாலத்தின் மறுமுனைக்கு செல்வதற்குள் ரயில் அருகில் வந்துவிட்டது. ரயில் மோதியதில் 2 பெண்கள் உட்பட 4 பேரும் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட நிலையில் அனைவரும் இறந்தனர்.
நவ 02, 2024