/ தினமலர் டிவி
/ பொது
/ பீகாரில் முதல்முறையாக எஸ்ஐ ஆன திருநங்கை! Transgender becomes Police SI | Manvi Kashyap | Bihar Polic
பீகாரில் முதல்முறையாக எஸ்ஐ ஆன திருநங்கை! Transgender becomes Police SI | Manvi Kashyap | Bihar Polic
பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் மான்வி மது காஷ்யப். ஆணாக பிறந்த இவர், சில ஆண்டுகளுக்கு பின் தன்னை பெண்ணாக உணரத் துவங்கினார். கல்லுாரிப் படிப்புக்கு பின் போலீஸ் ஆக வேண்டும் என விரும்பினார். சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான போட்டித் தேர்வுக்கு, மூன்றாம் பாலினத்தவர் என குறிப்பிட்டு விண்ணப்பித்தார். எனினும், எழுத்து தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வுக்காக சிறப்பு பயிற்சி தேவைப்பட்டது. திருநங்கை என்ற ஒரே காரணத்திற்காக, பல பயிற்சி மையங்கள் காஷ்யபுக்கு பயிற்சி அளிக்க மறுத்துவிட்டன. ரஹ்மான் என்ற ஆசிரியர் காஷ்யப்பை ஊக்குவித்து பயிற்சி அளித்தார்.
ஜூலை 11, 2024