தவெகவில் தூக்கப்பட்ட 2வது முக்கிய புள்ளி | karur stampede | tvk vijay meeting stampede | karur case
கரூரில் நடந்த தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் கரூர் போலீசாரும் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணை அதிகாரியாக ஏஎஸ்பி ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். தகெவ பொதுச்செயலாளர் ஆன்ந்த், மாநில நிர்வாகி நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உட்பட பலர் மீது கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இவர்களை கைது செய்ய 5 தனிப்படை அமைக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் மதியழகன் நேற்றே கைது செய்யப்பட்டார். இந்த கைது பரபரப்பு அடங்குவதற்குள் தவெகவின் கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகளை செய்தவர் என்ற முறையிலும், மாவட்ட செயலாளர் மதியழகனுக்கு அடைக்கலம் கொடுத்தவர் என்ற குற்றச்சாட்டிலும் பவுன்ராஜ் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அதாவது, போலீசார் வழக்கு பதிவு செய்ததுமே மதியழகன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவர் பவுன்ராஜ் வீட்டில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அவருக்கு அடைக்கலம் கொடுத்ததால் பவுன்ராஜையும் சேர்த்து போலீசார் கைது செய்துள்ளனர். மதியழகனும் பவுன்ராஜும் கரூர் நகர போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. தலைமறைவாக இருக்கும் மற்றவர்களை கைது செய்வதிலும் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். #KarurStampede #TVKVijay #karurissue #AadhavArjuna #DMKvsTVK #DMKSaravanan #viralvideo #groundreport #TVKVijayKarurStampede #StampedeAlert #KarurNews #BreakingNews #VijayUpdates #TamilNaduNews #SafetyFirst #EventSafety #TragicEvent #CrowdControl #Awareness #CommunitySupport #LocalNews #KarurUpdates #VijayCommunity