உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருமணம் செய்வதாக கூறி, சிறுமிகளை சீரழித்த கொடூரர்கள் Two young girls sexually assaulted in home 2

திருமணம் செய்வதாக கூறி, சிறுமிகளை சீரழித்த கொடூரர்கள் Two young girls sexually assaulted in home 2

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. திருவள்ளூர் அடுத்த மணவாள நகரை சேர்ந்தவர் சஞ்சய் 24. இவர், 16 வயது பள்ளி மாணவியுடன் 10 மாதங்களாக பழகி வந்தார். திருமணம் செய்வதாக கூறி, மாணவியுடன் நெருக்கமாக இருந்துள்ளார். மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சஞ்சய், திடீரென உறவை துண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவி கடும் மன உளைச்சல் அடைந்தார். வீட்டில் யாருடனும் பேசாமல் விரக்தியுடன் இருந்துள்ளார். பள்ளிக்கும் செல்லவில்லை. இதைப் பார்த்த பெற்றோர், மகளை அதட்டி கேட்டபோது நடந்த உண்மையை சொன்னார். அதைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் மணவாளநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் போலீசார் இளைஞர் சஞ்சயை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். ஊத்துக்கோட்டையை சேர்ந்த பாலாஜி என்ற 30 வயது வாலிபர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கம்பெனிக்கு செல்லும் வழியில் வசிக்கும் 16 வயது சிறுமியுடன் பேசுவது வழக்கம். அவர் 10ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார். நாளடைவில் சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார். பெற்றோர் கூலி வேலைக்கு சென்ற சமயங்களில் வீட்டுக்கு வந்து சிறுமியுடன் பாலாஜி நெருக்கமாக இருந்துள்ளார். பெற்றோர் இல்லாத நேரத்தில் வாலிபர் ஒருவர் சிறுமி வீட்டுக்கு வந்து செல்வதை பார்த்த அக்கம்பக்கத்தினர் பெற்றோரிடம் கூறினர். அவர்கள் மகளிடம் கேட்டபோது உண்மை அம்பலமானது.

பிப் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ