/ தினமலர் டிவி
/ பொது
/ உ.பியில் நடந்தது என்ன? பயங்கர துப்பாக்கிச்சண்டை 3 khalistan-terrorists dies-police-encounter
உ.பியில் நடந்தது என்ன? பயங்கர துப்பாக்கிச்சண்டை 3 khalistan-terrorists dies-police-encounter
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் முகாம் மீது கடந்த 19ம்தேதி கையெறி குண்டுகள் வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.. அந்நேரத்தில் போலீஸ் அவுட் போஸ்டில் யாரும் இல்லை. அதனால் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு காலிஸ்தான் ஜிந்தாபாத் ஃபோர்ஸ் எனும் தடை செய்யப்பட்ட அமைப்பு பொறுப்பேற்றது. கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து பஞ்சாபில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய 8 வது தாக்குதல் சம்பவம் இதுவாகும். இந்த சம்பவத்தில் குர்விந்தர் சிங் 25 வீரேந்தர் சிங் என்ற ரவி 23 ஜஸ்ப்ரீத் சிங் என்ற பிரதாப் சிங் 18 ஆகிய காலிஸ்தான் பயங்கரவாதிகள் ஈடுபட்டது தெரிய வந்தது.
டிச 23, 2024