தப்பியோடிய விஏஒவை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்
கோவை தொம்பிலிபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி, வாரிசு சான்று கேட்டு, மத்வராயபுரம் விஏஓ வெற்றிவேலிடம் விண்ணப்பித்து இருந்தார். ஆனால், விஏஓ 3500 ரூபாய் லஞ்சம் கேட்டு இருக்கிறார். கிருஷ்ணசாமி பணம் தராததால், சான்றிதழ் வழங்காமல் விஏஓ வெற்றிவேல் இழுத்தடித்து வந்துள்ளார். இது பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசில் கிருஷ்ணசாமி புகார் தெரிவித்தார். ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை போலீசார் அவரிடம் கொடுத்து அனுப்பினர். நேற்று இரவு பேரூரில், விஏஒ வெற்றிவேலிடம் அந்த பணத்தை கொடுத்தார் கிருஷ்ணசாமி. அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விஏஓவை பிடிக்க முயன்றபோது, இருசக்கர வாகனத்தில் அவர் தப்பியோட முயன்றனர்.
மார் 15, 2025