விஜயின் ஈரோடு பிரச்சாரம்: கடைசி நேரத்தில் மாறிய களம் |Vijay TVK |Erode Meeting |Police Permission
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், கரூர் சம்பவத்துக்கு பின், மக்கள் சந்திப்பு பயணத்தை மீண்டும் துவங்கி உள்ளார். காஞ்சிபுரம், புதுச்சேரியில் பிரசாரம் செய்த அவர், வரும் 18ம் தேதி, ஈரோட்டில் பயணம் மேற்கொண்டு, பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், விஜயமங்கலம் டோல்கேட் அருகே இடம் பார்க்கப்பட்டது. ஆனால் அந்த இடம் விஜயபுரி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடம் என அதன் செயல் அலுவலர் தனலட்சுமி ஈரோடு கலெக்டர், போலீசிடம் மனு அளித்தார். இது தவெக நிர்வாகிகள் மத்தியில் அதிர்வலையை உண்டாக்கியது. கூட்டம் நடக்குமா நடக்காதா என்கிற நிலை உருவானது. சமீபத்தில் தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இந்த சிக்கலை கையில் எடுத்தார். ஈரோடு அவரது சொந்த மாவட்டமாகும். அவரது அனுபவத்தை கொண்டு அதிகாரிகள், போலீஸ் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரச்சார கூட்டம் நடத்தும் இடத்துக்கு டெபாசிட் தொகையாக 50 ஆயிரமும், வாடகையாக 50 ஆயிரமும் செலுத்த வேண்டும் என அரசு தரப்பில் தவெக நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டது.