திமுக கவுன்சிலர் ரவுடித்தனம்: கிழித்து தொங்கவிட்ட அண்ணாமலை | Annamalai | bjp | stalin | police
திருவாரூர் நகராட்சி 30-வது வார்டு திமுக கவுன்சிலர் புருஷோத்தமன். திருவாரூர் கட்டபொம்மன் தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவுக்காக பேனர் வைக்க ஆதரவாளர்களுடன் வந்தார். கிஷோர் (வயது 26) என்பவரது வீட்டின் முன் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இங்கெல்லாம் பேனர் வைக்க கூடாது என கிஷோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கவுன்சிலர் புருஷோத்தமனும் அவரது ஆதரவாளர்களும் கிஷோரை சுற்றி வளைத்து தாக்கினர். தடுக்க வந்த கிேஷாரின் நண்பர் விக்னேஷுக்கும் அடி உதை விழுந்தது. படுகாயமடைந்த கிஷோர், விக்னேஷ் திருவாரூர் அரசு ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டுள்ளளனர். வீடியோ அடிப்படையில் கவுன்சிலர் புருஷோத்தமன் உட்பட 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, பாஜ தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.