பார்லியில் வெடித்த எதிர்கட்சிகள்... ஓங்கி அடித்த பாஜ மந்திரி | NDA vs INDI Alliance | Waqf Bill 2024
மத மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முஸ்லிம்கள் நன்கொடையாக வழங்கி வருகின்றனர். அதை கண்காணிக்க மாநில அளவில் வக்பு வாரியங்கள் உள்ளன. தேசிய அளவில் வக்பு கவுன்சில் உள்ளது. வக்கு தீர்ப்பாயமும் செயல்படுகிறது. வக்பு சொத்துக்களை நிர்வகிப்பது தொடர்பாக வக்பு வாரிய சட்டம் 1995 கொண்டு வரப்பட்டது. 2013ல் சட்டத்தில் இருந்த பல விதிகளை காங்கிரஸ் அரசு தளர்த்தியது. இப்போது நாடு முழுதும் 9.4 லட்சம் ஏக்கர் சொத்துக்கள் வக்கு வாரியங்களிடம் உள்ளன. இதை நிர்வகிப்பதில் பல முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்த நிலையில் வக்பு சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இன்று வக்பு சட்டம் திருத்த மசோதாவை சிறுபான்மையினர் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ லோக்சபாவில் அறிமுகம் செய்தார். அப்போது காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்கட்சியினர் கொந்தளித்தனர். மசோதாவுக்கு எதிராக கோஷம் போட்டனர். அவர்களை சபாநாயகர் கண்டித்தார்.