/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தமிழக அரசு தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது தருமபுரி கோர்ட்! | Bharatha Matha Temple Case | BJP
தமிழக அரசு தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது தருமபுரி கோர்ட்! | Bharatha Matha Temple Case | BJP
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவா மணி மண்டப வளாகத்தில், பாரத மாதா ஆலயம் உள்ளது. அங்கு கடந்த 2022ம் ஆண்டு பாஜ மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் அத்துமீறி நுழைந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பென்னாகரம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் தருமபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட 11 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏப் 22, 2025