/ தினமலர் டிவி
/ அரசியல்
/ காங் ஆட்சியில் நடந்த ரயில்வே நியமன மோசடி; Court Summons to Lalu and his sons| Lalu prasad yadav| E
காங் ஆட்சியில் நடந்த ரயில்வே நியமன மோசடி; Court Summons to Lalu and his sons| Lalu prasad yadav| E
மத்தியில் 2004 - 2009 வரை நடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தார். அவரது அமைச்சரவையில், ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, ரயில்வே துறையில் பீகாரை சேர்ந்த பலர் பணியமர்த்தப்பட்டனர். ரயில்வே பணியில் சேர்ந்தவர்கள் லஞ்சமாக அவர்களின் நிலத்தை லாலு உறவினர்களுக்கு எழுதிக் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிந்து விசாரணையை துவங்கியது. அதே சம்பவத்தில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறையும் வழக்கு பதிந்தது.
செப் 18, 2024