உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சொந்த கட்சி மாஜிக்களுக்கே EPS வேட்டு வைப்பது ஏன்? EPS vs OPS vs Sasikala | ADMK crisis | ADMK case

சொந்த கட்சி மாஜிக்களுக்கே EPS வேட்டு வைப்பது ஏன்? EPS vs OPS vs Sasikala | ADMK crisis | ADMK case

அ.தி.மு.க.,வில் ஒற்றுமை முயற்சியை மேற்கொள்ளும் முன்னாள் அமைச்சர்கள் ஆறு பேருக்கும் செக் வைக்கும் வகையில், அவர்களின் சொந்த மாவட்டங்களில் உள்ள எதிர்கோஷ்டிகளை கொம்பு சீவிவிட அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பிறகு, பிரிந்தவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று சசிகலா, பன்னீர்செல்வம் ஆகியோர் கூறி வருகின்றனர். அவர்களின் அறிவிப்பை நிராகரிக்கும் வகையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு, இனி ஒருபோதும் இடமில்லை என்று கூறி வருகிறார். ஆனால், அ.தி.மு.க.,வில் ஒற்றுமை முயற்சியை மேற்கொள்ள விரும்பும், ஆறு முன்னாள் அமைச்சர்கள் கொண்ட குழுவினர், பழனிசாமியிடம் ஏற்கனவே ஒருமுறை முறையிட்டனர். அதை பழனிசாமி ஏற்கவில்லை. அதோடு, எதிரிகளோடு தொடர்ந்து அவர்கள் தொடர்பில் இருக்கின்றனர் என்ற கோபமும் பழனிசாமிக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் தான் பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தரப்பில் தலா ஆறு பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

செப் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !