/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஜெயலலிதா கார் டிரைவரின் சகோதரருக்கு ஐகோர்ட் உத்தரவு | High court | Edapadi defamation case
ஜெயலலிதா கார் டிரைவரின் சகோதரருக்கு ஐகோர்ட் உத்தரவு | High court | Edapadi defamation case
பழனிசாமிக்கு ₹1.10 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு, 2017 ஏப்ரலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவரது கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளை நடந்தது. அப்போது காவலாளி கொல்லப்பட்டார். இது தொடர்பான வழக்கில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். ஆனால் அவர் சாலை விபத்தில் இறந்தார். கனகராஜ் மரணம் தொடர்பாக அவருடைய சகோதரர் தனபால் அதிமுக பொது செயலாளர் பழனிசாமியை தொடர்பு படுத்தி பேசிவந்தார். சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டார். அதற்கு தடை விதிக்க கோரியும், மான நஷ்ட ஈடு கோரியும் ஐகோர்ட்டில் பழனிசாமி வழக்கு தொடர்ந்தார்.
நவ 07, 2024