உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கைக்கு எதிராக சர்ச்சை கருத்து | Karti Chidambaram | Congress MP |

இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கைக்கு எதிராக சர்ச்சை கருத்து | Karti Chidambaram | Congress MP |

இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் 1ம் தேதி துவங்கியது. இளைஞர் காங்கிரஸ் தேர்தல் மேலிட பொறுப்பாளர் முருகன் முனிரத்தினம், மாநில தலைவர் லெனின் பிரசாத் உட்பட நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். இந்த சூழலில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் வெளியிட்ட பதிவு அக்கட்சியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை பேய் போன்றது; அதை நிறுத்த வேண்டும்; நம்மை நாமே முட்டாளாக்கிக் கொள்கிறோம் எனவும் கார்த்தி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவரது சர்ச்சை கருத்துக்கள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. உறுப்பினர் சேர்க்கையில் ஆர்வமாக ஈடுபட வரும் நிர்வாகிகளிடம் மனசோர்வை ஏற்படுத்தும் அவரது கருத்துக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். அவர் மீது டில்லி மேலிடம் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி எதிர்கோஷ்டி தரப்பில் புகார் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ராமசாமி கூறியதாவது, கார்த்தி சிதம்பரத்திற்கு கருத்து சொல்ல உரிமை உண்டு. ஆனால் அதை கட்சி மேலிடத்தில் தான் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். வெளிப்படையாக பேசக்கூடாது. இளைஞர்கள் ஆர்வமாக கட்சியில் சேர விரும்பும் நிலையில் அவர்களை தடுமாற வைக்கும் வகையில் கருத்து தெரிவிக்கக்கூடாது. அவர் எம்.பி என்பதால் கட்சி மேலிடம் தான் விளக்கம் கேட்க முடியும் என்றும் அவர் கூறினார். போலி உறுப்பினர்களை சேர்த்து கட்சியை ஏமாற்றாமல், உண்மையான உறுப்பினர்களை சேர்த்து பேய் மாதிரி உழையுங்கள் என்ற அர்த்தத்தில் கார்த்தி சிதம்பரம் கருத்து சொல்லி இருக்கலாம். அல்லது போலி உறுப்பினர்களை சேர்ப்பதில் இளைஞர் காங்கிரசாரின் செயல்பாடு பேய் மாதிரி உள்ளது என்றும், உறுப்பினர் சேர்க்கையை நிறுத்த வேண்டும் என்ற அர்த்தத்திலும் கருத்து தெரிவித்திருக்கலாம்.

டிச 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை