/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பெண் டாக்டர் சம்பவத்தால் மம்தா தலையில் பேரிடி | kolkata woman doctor case | kolkata navratri pooja
பெண் டாக்டர் சம்பவத்தால் மம்தா தலையில் பேரிடி | kolkata woman doctor case | kolkata navratri pooja
நவராத்திரி சமயத்தில் மேற்கு வங்கத்தில் 9 நாட்களும் காளிக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். மாநிலத்தின் ஒவ்வொரு நகரிலும், கிராமத்திலும் பெரிய பெரிய பந்தல் அமைத்து, காளி தேவி சிலையை வைத்து பூஜை செய்வர்; நவராத்திரியின் 9 நாட்களிலும் அன்னதானம் நடக்கும். மேற்கு வங்க கிராமிய நடனங்கள் நடைபெறும். குறிப்பாக கொல்கத்தாவின் ஒவ்வொரு பகுதியிலும், ஒரு முக்கிய இடத்தில் பெரிய பந்தல் அமைப்பர். அந்த சமயத்தில் என்ன விஷயம் பரபரப்பாக பேசப்படுகிறதோ, அதை பந்தலின் தீம் ஆக வைத்து விடுவர். சமீபத்தில் கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் இளம் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
ஆக 25, 2024