17 நாட்களில் 2வது முறை மோடியின் ஜார்கண்ட் விசிட் PM Modi at Jharkhand| Eklayva Schools | Modi | BJP
ஜார்கண்டின் ஹசாரிபாக்கில் நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். மத்திய அரசு நிதியில் கட்டப்பட்ட 40 ஏகலைவா பள்ளி கட்டங்களை திறந்து வைத்த மோடி, மேலும் 25 பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ஹாஸ்டல் வசதியுடன் கூடிய ஏகலைவா பள்ளிகள் மூலம் ஆயிரக்கணக்கான பழங்குடியின மாவணர்கள் பலன் அடைவர். மொத்தம் 2,800 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாட்டின் 549 மாவட்டங்களில் ஏகலைவா பள்ளிகள் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. அதன் படி, 63,000 கிராமங்களை சேர்ந்த 5 கோடி பழங்குடியின மாணவர்கள் பலன் அடைவர். தொடர்ந்து 79 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை மோடி துவக்கி வைத்தார். மேலும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.