/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தீர்ப்பை ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட் | senthil balaji| supreme court| ED
தீர்ப்பை ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட் | senthil balaji| supreme court| ED
ட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. ஓராண்டுக்கு மேலாக அவர் சிறையில் உள்ளார். ஜாமின் கேட்டு சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றுள்ளார். கடந்த 14ம் தேதி ஜாமின் வழக்கு விசாரணைக்கு வந்தது. சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வேறு ஒரு வழக்கில் ஆஜராகி இருந்ததால், செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க அமலாக்கத்துறை கோரியது. நீதிபதிகள் கூறும்போது, இந்த வழக்கில் தீர்ப்பை குறிப்பிடாமல் ஒத்திவைத்துவிட்டோம். இந்த வழக்கில் சில விளக்கங்கள் தேவைப்படுகிறது என்றனர்.
ஆக 20, 2024