/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கோயிலில் திருடிய பெண்ணை கைது செய்யாமல் விட்ட போலீஸ் | Srinivasa perumal temple | jewellery theft
கோயிலில் திருடிய பெண்ணை கைது செய்யாமல் விட்ட போலீஸ் | Srinivasa perumal temple | jewellery theft
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லுப்பட்டி கிராமத்தில் ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் உள்ளது. கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இன்று மண்டலாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் மற்றும் ஊழியர்கள் செய்து கொண்டிருந்தனர். அப்போது, கோயிலுக்குள் ஒரு பெண் வந்தார். சன்னதிக்குள் புகுந்து உற்சவருடன் உள்ள அம்பாள் கழுத்தில் இருந்த 5 சவரன் திருமாங்கல்யத்தை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல முயன்றார்.
ஜன 20, 2025