உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நிர்வாகிகள் பேச்சுக்கு முட்டு கொடுக்கும் திருமாவளவன்! Thirumavalavan | VCK | DMK Alliance

நிர்வாகிகள் பேச்சுக்கு முட்டு கொடுக்கும் திருமாவளவன்! Thirumavalavan | VCK | DMK Alliance

விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் அளித்த பேட்டியில், நான்கு ஆண்டுகளுக்கு முன், சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களே துணை முதல்வராகும் போது, 40 ஆண்டு கால அரசியல் அனுபவம் கொண்ட திருமாவளவன் துணை முதல்வர் ஆகக் கூடாதா என்றார். ஆதவ் கருத்து எங்களுக்கு ஏற்புடையதல்ல; உதயநிதியை விமர்சித்தவர் மீது திருமாவளவன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தி.மு.க துணை பொதுச்செயலர் ஆ.ராஜா வலியுறுத்தினார். இந்நிலையில், சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் திருமாவளவன் பேசியதாவது: எல்லா கட்சியிலும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. தி.மு.க கூட்டணியில், விடுதலை சிறுத்தைகளை சேர்த்துக் கொள்ளலாமா என, ஒவ்வொரு தேர்தலிலும், அவர்களது மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் கேட்கின்றனர். அதில், சேர்க்க வேண்டாம் என பெரும்பாலானவர்கள் சொல்கின்றனர். கடைசியில், தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் தான் முடிவெடுக்கின்றனர். அதேபோலவே, விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் அதன் நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை எடுத்து வைத்து பேசுகின்றனர். யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் தங்களுடைய கருத்தாக வைக்கலாம்; பேசலாம். ஒவ்வொரு கருத்தையும் தலைமையும் உள்வாங்கலாம். ஆனால், இறுதியில் தலைமை எடுப்பது தான் முடிவாக இருக்கும். வி.சி.க்களை பொறுத்தவரை, கட்சியின் துணை பொதுச்செயலராக இருக்கும் ஆதவ் அர்ஜுனா, கட்சியின் எதிர்கால நலனுக்காக என்ன பேசினாலும் அது சரிதான். அதேபோல, கட்சியில் சீனியர்களாக இருக்கும் ரவிகுமார், வன்னியரசு ஆகியோர் கட்சி நலனுடன் சேர்த்து கூட்டணி நலனுக்காகவும் பேசியதும் சரியானது தான்.

செப் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை