பெண் டாக்டர் வீட்டில் 2 ஆண்டில் 2 முறை கொள்ளை 2nd time in the same house | 40 sovereigns
ஈரோடு பழையபாளையம் அருகே கணபதிநகரைச் சேர்ந்தவர் துரைசாமி. ஆடிட்டர். உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு இறந்துவிட்டார். மனைவி சுப்புலட்சுமி வயது 70, ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை. இவர்களது மகள் ஜனனி பல் மருத்துவராக உள்ளார். கணவருடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். சுப்புலட்சுமி ஈரோட்டில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு தரைத்தளத்தில் உள்ள பெட்ரூமில் சுப்புலட்சுமி தூங்கினார். இன்று காலை எழுந்து வழக்கமான வேலைகளை செய்துவிட்டு முதல்தளத்துக்கு சென்றபோது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு 40 சவரன் நகைகள் மற்றும் 7 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. உடனடியாக ஈரோடு வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சுப்புலட்சுமி வீடு மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கொள்ளையடித்தவர் வீட்டின் மாடி வழியாக முதல்தளத்தில் நுழைந்து பீரோவை உடைத்து நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. #2ndtimesamehousetheft #40sovereignsofjewelrystolen #Erode #InspectionofCCTV #Police