உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / காஷ்மீர் தாக்குதல் TRF பொறுப்பேற்பு | Construction Workers | Doctor dies | Terror Attack

காஷ்மீர் தாக்குதல் TRF பொறுப்பேற்பு | Construction Workers | Doctor dies | Terror Attack

காஷ்மீரில் சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடந்து, உமர் அப்துல்லா தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடந்த மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் இதுவாகும். இந்த தாக்குதலை தாங்கள்தான் நடத்தியதாக பாகிஸ்தானைச் சேர்ந்த தி ரெஸிஸ்டேன்ஸ் ப்ரண்ட் எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது, லஷ்கர் இ தாய்பா பயங்கரவாத இயக்கத்தில் இருந்து உருவான பயங்கரவாத அமைப்பாகும். இந்த தாக்குதலுக்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கவர்னர் மனோஜ் சின்ஹா, முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த கொடூரமான தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் தப்ப முடியாது; அவர்களுக்கு பாதுகாப்பு படைகள் கடுமையான பதிலடியை கொடுக்கும் என அமித்ஷா கூறினார். காஷ்மீரை ஆளும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா இந்தியா மீது பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என எச்சரித்தார். புத்தி கெட்டத்தனமாய் இதுபோல தாக்குதல்களை நடத்துவதால் பயங்கரவாதிகளுக்கு என்ன லாபம் கிடைத்து விடப் போகிறது? என்ன நினைப்பில் இப்படி எல்லாம் செய்கிறார்கள்? காஷ்மீரில் பாகிஸ்தானை நிறுவி விட முடியும் என நினைக்கிறார்களா? பாகிஸ்தான் அரசுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்தியாவுடன் நல்லுறவு வைக்க வேண்டும் என விரும்பினால் இதுபோன்ற தாக்குதல்களை உடனடியாக நிறுத்தியாக வேண்டும் என, ஃபரூக் அப்துல்லா கூறினார்.

அக் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை