உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 AM | 01-08-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 AM | 01-08-2025 | Short News Round Up | Dinamalar

ென்னை அண்ணா பல்கலையில் 2021 முதல் 2024- வரை துணைவேந்தராக இருந்தவர் வேல்ராஜ். அவரது மூன்றாண்டு பதவி காலம் முடிந்தாலும், ஓய்வு பெறும் வயது இல்லாததால், தொடர்ந்து பேராசிரியராக பணியாற்றி வந்தார். இன்று ஜூலை 31உடன் பணி ஓய்வு பெற இருந்த நிலையில் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வேல்ராஜ் துணை வேந்தராக இருந்தபோது, அண்ணா பல்கலையின் கீழ் செயல்படும், தனியார் கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது. இந்நிலையில் அண்ணா பல்கலை சிண்டிகேட் கூட்டத்தில், நிதி முறைகேடு புகாரின் அடிப்படையில் வேல்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. துணைவேந்தராவதற்கு முன் வேல்ராஜ், அண்ணா பல்கலையின் எரிசக்தி ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றினார். அப்போது நிதி முறைகேட்டில் ஈடுபட்டார் என்ற புகாரின் அடிப்படையிலேயே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பணி ஓய்வு நாளில் வேல்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அண்ணா பல்கலை துணைவேந்தராக பதவி வகித்த கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவின் பதவிக் காலம் 2021-ல் முடிந்தது. அப்போது தமிழக பல்கலைகழகத்துக்கு தமிழர் ஒருவரே துணைவேந்தராக நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக முன்வைக்கப்பட்டது. அந்த சூழலில், அண்ணா பல்கலை துணைவேந்தர் பணிக்கு 160-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அதில், அண்ணா பல்கலையின் இயக்குநர், துணை இயக்குநர், துறைத் தலைவர் என பல்வேறு பொறுப்புகள் வகித்த நாகர்கோவிலை சேர்ந்த வேல்ராஜ் தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை