உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / விளையாட்டு / பெண்கள் பிரிவில் புதுச்சேரி; ஆண்கள் பிரிவில் தெலுங்கானா சாம்பியன்ஷிப்|national basketbal|covai

பெண்கள் பிரிவில் புதுச்சேரி; ஆண்கள் பிரிவில் தெலுங்கானா சாம்பியன்ஷிப்|national basketbal|covai

இந்திய சக்கர நாற்காலி கூடைப்பந்து கூட்டமைப்பு சார்பில் தென் மண்டல வீல்சேர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி, நேரு ஸ்டேடியம் எதிரே கூடைப்பந்து அரங்கில் நடந்தது. பெண்கள் பிரிவில், கேரளா, புதுச்சேரி என இரு அணிகள் மோதியது. ஆண்கள் பிரிவில், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய ஐந்து அணிகள் பங்கேற்றன. பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த பெண்களுக்கான இறுதிப்போட்டியில் கேரள அணியும், புதுச்சேரி அணியும் மோதியது. இரு அணி வீராங்கனைகளும் அபார திறமையை வெளிப்படுத்தினர். நிறைவில் 18-8 என்ற புள்ளிக் கணக்கில் புதுச்சேரி அணி வெற்றி பெற்றது. ஆண்கள் பிரிவில், தெலுங்கானா அணியும், புதுச்சேரி அணியும் மோதின. இதில் 44-28 என்ற புள்ளிக் கணக்கில் தெலுங்கானா அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற இரு அணிகளும், மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடக்கும் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு கூட்டமைப்பின் தொழில்நுட்ப கமிஷனர் பத்மநாபன் உள்ளிட்டோர் பரிசுகள் வழங்கினர்.

ஆக 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !