நிஜமே நினைவாக...
செல்லப்பிராணி வளர்க்கும் பலரும், அதனுடன் புகைப்படம் எடுப்பது, அதன் பெயரில் சமூக வலைதள பக்கம் உருவாக்குவது, அதன் உருவம் பொறித்த டி-சர்ட் அணிவது என, விதவிதமான செயல்பாடுகளால், தங்கள் அன்பை வெளிப்படுத்துவது வழக்கம்.இதன் நீட்சியாக, தற்போது செல்லப்பிராணி உருவம் பொறித்த கீ-செயின், மார்கெட்டில் அதிகளவில் விற்கப்படுகிறது. இதிலும், ஆன்லைனில் இயங்கும் சில நிறுவனங்கள், செல்லப்பிராணியின் புகைப்படம் அனுப்பினால், அதன் உருவத்தை அச்சு அசலாக பொம்மை போலவே உருவாக்கி, பெயர் இணைத்து, கீ-செயினாக தயாரித்து தருகின்றனர். இது, பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு, எங்கு சென்றாலும் உடன் கொண்டு செல்லலாம் என்பதால், பலரும் விரும்புகின்றனர்.புதுசு கண்ணா புதுசு!