உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / வீடு வாங்கும் போது, உட்புற உயர விஷயத்தில் கவனம் தேவை!

வீடு வாங்கும் போது, உட்புற உயர விஷயத்தில் கவனம் தேவை!

சொ ந்தமாக புதிய வீட்டை வாங்கும் போது அதன் பரப்பளவு என்ன என்பதில் துவங்கி, பல்வேறு விஷயங்களை மக்கள் துல்லியமாக கவனிக்கின்றனர். இந்த வகையில் கட்டட வரைபடங்கள், ஆவணங்களுக்கு அப்பால் பயன்பாட்டு ரீதியாக கட்டடத்தில் பல்வேறு விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. புதிய வீடு வாங்குவது என்றால் தனி வீட்டை வாங்குவது என்று தான் தேடல் துவங்கும், ஆனால், சூழல் அடிப்படையில் இதில் மாற்றம் ஏற்படும். தனி வீட்டை வாங்க வேண்டும் என்று நினைக்கும் பலரும் இறுதியில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் வீடு வாங்கும் நிலை ஏற்படுகிறது. தனி வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு எதுவாக இருந்தாலும் நீங்கள் வாங்கும் வீட்டில் பயன்பாட்டு ரீதியாக சில அடிப்படை விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக, வீட்டின் உட்புற பரப்பளவு என்ன, ஒவ்வொரு அறையின் பரப்பளவு என்ன என்பது போன்ற விபரங்களை மக்கள் கேட்கின்றனர். ஆனால், அதே நேரத்தில் கட்டடத்தின் உயரம் தொடர்பான விஷயங்களில் அலட்சியமாக இருந்துவிடுகின்றனர். வீடு வாங்கும் போது இதில் அலட்சியமாக இருப்பதால், பயன்பாட்டு நிலையில் மக்கள் பல்வேறு அசவுகரியங்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, கட்டடத்தின் வரைபடத்தில் அதில் அஸ்திவார ஆழம் என்ன, வெளிப்புற உயரம் என்ன என்பது போன்ற தகவல்கள் கிடைக்கும். ஆனால், உட்புற உயரம் என்னவாக இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களுக்கு தெரியாத சூழல் நிலவுவதால், இதில் பல்வேறு ஏமாற்று வேலைகள் நடக்கிறது. நீங்கள் வாங்கும் வீட்டின் உயரம், 9 அடியாக இருக்கும் என்று கட்டுமான நிறுவனம் தெரிவிக்கும் நிலையில், அது போதும் என்று மக்கள் நினைக்கின்றனர். உண்மையில் ஒரு கட்டடத்தின் உட்புற உயரம் என்னவாக இருக்க வேண்டும் என்பதில் பலரும் உரிய கவனம் செலுத்துவதில்லை.ஒரு கட்டடம் என்றால் அதன் உட்புற உயரம், 10 அல்லது 11 அடி உயரத்தில் இருக்க வேண்டும். அப்போது தான் முறையான காற்றோட்ட வசதியை ஏற்படுத்த முடியும் என்பதுடன், வீட்டிற்குள் மின்சார சாதனங்களை பாதுகாப்பான முறையில் அமைக்க முடியும். ஆனால், இதில் அதிக உயரம் இருந்தால் நல்லதல்ல என்ற தவறான எண்ணத்தில் மக்கள் பல்வேறு தவறுகளை செய்வதாக பரவலாக தெரியவந்துள்ளது. குறிப்பாக, 10 அல்லது 11 அடி உயரத்துக்கு பதிலாக, 9 அடி உயரத்தில் கட்டப்படும் வீடுகளை மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர். இதனால், வீட்டின் உட்புற உயரம் குறையும் நிலையில் பயன்பாட்டு ரீதியாக பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. புதிய வீட்டை பயன்படுத்தும் போது, சில ஆண்டுகளில் இப்பிரச்னைகள் தெரியவரும் நிலையில் வருத்தப்படுவதால் எந்த பயனும் இல்லை என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை