30 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு ரூபாய் நோட்டு
மத்திய அரசு, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள பணம் அச்சடிக்கும் மையத்தில் (Currency Note Press (CNP) ) ஒரு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. நாசிக்கில், ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை விட்டு சுமார் 30 வருடங்கள் ஆகின்றன. ரிசர்வ் வங்கி உத்தரவின்பேரில், மீண்டும் ஒரு ரூபாய் நோட்டுகள் தீவிரமாக அச்சடிக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் நிலவும், சில்லறை தட்டுப்பாட்டை மனதில் வைத்து இந்த முடிவை, ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது.