பிரதமருக்கு மாணவன் எழுதிய கடிதம்
பிப். 3 உ.பி. மாநிலம், 'உன்னவ்' பகுதியைச் சேர்ந்த மாணவன் நயன். அவன் பள்ளிக்குப் போகும்போது கடக்கும் இடத்தில் பாதுகாப்பான ரயில்வே கிராஸிங் ஏதும் இல்லை. இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்குப் புகார்க் கடிதம் ஒன்றை அனுப்பினான். அந்தக் கடிதம் ரயில்வே துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ரயில்வே அமைச்சகம் தலையிட்டு, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணவேண்டும் என பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.