யானை மரணங்கள் நீதி விசாரணை
நம் நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 373 யானைகள் இறந்துள்ளன. ஆனால் இவை அனைத்தும் இயற்கை மரணங்கள் அல்ல. மின்சாரம், ரயில் போன்றவற்றினால் ஏற்பட்ட மரணங்கள் என்பது மிகவும் துயரமான செய்தியாகும். நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கையில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரியான மகேஷ் சர்மா மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.இறந்த 373 யானைகளில், 62 யானைகள் இரயில் பாதையில் அடிபட்டு இறந்துள்ளன. 226 யானைகள் மின்சாரம் தாக்கியும், 59 யானைகள் வேட்டையாடப்பட்டும், 26 யானைகள் நச்சு வழங்கப்பட்டும் இறந்துள்ளன.