காடு வளர்க்கும் குழந்தைகள்
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம், கக்காடு ஊராட்சியைச் சேர்ந்த 30 மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் இணைந்து, ஒரு காட்டை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். மருத்துவ குணம் கொண்ட மரங்கள் உட்பட பல்வேறு மரங்களுக்கும் இடமளிக்கப் போகும் இக்காட்டில், மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவைப்படும் எல்லா வசதிகளும் இருக்கும். 1 ஏக்கர் நிலத்தில் 1,000 வகையான மரங்களை நட்டு வளர்க்க உள்ளனர். இந்தக் காட்டை ஒட்டி, வண்ணத்துப் பூச்சிகளுக்கான பூங்கா ஒன்றையும் உருவாக்க உள்ளனர். சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் மாற்றுத்திறன் குழந்தைகளின் கனவுக் காட்டுக்கு, 'பச்சிலைக்காடு' என்று பெயரிட்டுள்ளனர்.