குளுகுளு குற்றாலம்!
மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்துவருவதால், குற்றாலத்தில் உள்ள அருவிகளில், நீர்வரத்து சீராக உள்ளது. இதனால் குற்றால சீசன் களைகட்டியுள்ளது. சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. வழக்கத்தைவிட, விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அலைமோதி வருகின்றனர்.