புத்தகச்சுமை குறைவு!
இராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள பள்ளிகளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பாடச்சுமையை அரசு குறைத்துள்ளது. இதற்கென, 'பச்சோ கா போஜ் கம்' (குழந்தைகளின் சுமையைக் குறைப்போம் BKBK) எனும் திட்டத்தை, கடந்த செப்டம்பர் மாதம் முதல் செயற்படுத்தியுள்ளனர். இதன் விளைவாக, ஒரு கிலோ எடைகொண்ட பாட நூல்களின் சுமை, அரை கிலோவாகக் குறைந்துள்ளது.