மாணவர் வருகை பற்றி இனி பெற்றோருக்கு குறுஞ்செய்தி தகவல்
நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா மத்திய பள்ளிகளில், மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டால் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மேலும், வீட்டுப்பாடம், தேர்வு அட்டவணை, தேர்வு முடிவுகள், உட்பட பல்வேறு தகவல்களை, பெற்றோர்கள் இணையம் மற்றும் எஸ்.எம்.எஸ்., மூலம், அறிந்துகொள்வதற்கான நடைமுறைகள் வர இருக்கின்றன.