பாதுகாப்புக்கு அபராதம்!
பஞ்சாபைச் சேர்ந்தவர், சர்தூல் சிங் கும்மான். இவர், 2015இல் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தார். அப்போது, திடீரென காரணமின்றி இறக்கிவிடப்பட்டார். இதை எதிர்த்து நுகர்வோர் உரிமை ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதை விசாரித்த ஆணையம் சர்தூலுக்கு, ஏர் இந்தியா 1 இலட்சம் ரூபாயை நஷ்டஈடாகச் செலுத்த உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு பிரச்னையே இறக்கிவிட்டதற்குக் காரணம் என்று ஏர் இந்தியா பதிலளித்துள்ளது.