பெட்ரோல் டீசல் விலை உயர்வு
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோலியப் பொருள்களின் விலையை நிர்ணயம் செய்கின்றன.சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு மாற்றம் காரணமாக பெட்ரோலியப் பொருள் விலை உயர்ந்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.19 ம், டீசல் விலை லிட்டருக்கு 0.89 காசுகளும் உயர்த்தப்பட்டன. இந்த விலை உயர்வு 4.4.16 திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.