உள்ளூர் செய்திகள்

தமிழ் மொழியில் அஞ்சல் தலை!

மலேசியா நாட்டின் தபால் துறை, தமிழ் மொழியில் அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. வெள்ளை நிற வட்ட வடிவத்தின் மையத்தில் அலங்காரத்தில் பயன்படுத்தப்படும் தென்னை ஓலை, மாவிலைத் தோரணங்கள் போன்ற வடிவமைப்பில் 'நன்னெறிப் பண்பு' என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. இதன் வடிவமைப்பாளர் வேலு பெருமாள் பெயரும் இந்த அஞ்சல் தலையில் இடம்பெற்றுள்ளது. தமிழுக்கு மலேசிய அரசு வழங்கியுள்ள கவுரவமாக மலேசிய தமிழ் மக்கள் இதைக் கருதுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !