UPDATED : டிச 04, 2024 03:25 PM | ADDED : டிச 04, 2024 03:23 PM
புயல் மழையால் பாதிக்கப்பட்ட சம்பவத்தில் இருந்து மக்கள் மீண்டுவரும் வகையில் கார்த்திகை தீபதிருவிழா கொடியேற்றம் விமரிசையாக நடைபெற்றது.
அண்ணாமலைக்கு அரோகரா கோஷத்துடன் கோவிலின் தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டது
கொடியேற்றத்தைக் காண பக்தர்கள் திரளாக வந்திருந்தனர்.விழாவினை முன்னிட்டு உண்ணாமலை சமேத அண்ணாமலையார் மற்றும் பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கோவில் கோபுரங்கள் அனைத்தும் மின்விளக்குள் ஏற்றப்பட்டு ஜொலிஜொலித்தது.திருவிழாவின் முதல் நாளான்று ராஜகோபுரம் முன்பாக பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினார்.
-படங்கள்:அருண்.