உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சிந்தனைக் களம் / மூடிய கதவுகள் திறக்க வழியுண்டா? ஸ்டெர்லைட் காப்பர் விவாதத்தில் ஒரு புதிய திருப்பம்

மூடிய கதவுகள் திறக்க வழியுண்டா? ஸ்டெர்லைட் காப்பர் விவாதத்தில் ஒரு புதிய திருப்பம்

துாத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை, சமீபகாலம் வரை, மூடிய அத்தியாயமாக தோன்றியது. ஆனால் இன்று இந்தக் கடலோர நகரத்தின் சூழல் மாற்றம் கண்டு வருவதாகத் தெரிகிறது. மக்களின் மனக்குமுறல் மட்டுமல்லாமல், பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத் தேவைகளை கருத்தில் கொண்டு, தொலைநோக்கு பார்வையில் ஸ்டெர்லைட் ஆலையின் நிலைமையை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது.

இரண்டு முக்கிய முன்னேற்றங்கள்

முதலாவதாக, தமிழக முதல்வர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் நிபுணர் குழு கடந்த மாதம் சமர்ப்பித்த அறிக்கையில், மேம்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புகளின் கீழ், ஸ்டெர்லைட் காப்பர் உருக்காலையை மீண்டும் திறக்க, ஒரு கட்டமைப்பு திட்டத்தை முன்வைத்துள்ளது.இந்த குழுவில் இடம் பெற்றுள்ள பத்மஸ்ரீ விருது பெற்ற, பேராசிரியர் ஜி.டி.யாதவ், மும்பை, 'இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி' கல்வியகத்தின் முன்னாள் துணை வேந்தராக பணியாற்றியவர்.குழுவின் இரண்டாம் உறுப்பினரான பேராசிரியர் ஆர்.நாகேந்திரன், அண்ணா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் பொறியியல் பேராசியராகவும், தேசியப் பசுமை தீர்ப்பாயத்தில் சுற்றுச்சூழல் பொறியியல் நிபுணராகவும் பணிபுரிந்தவர். இவர்களால் கட்டமைக்கப்பட்ட இந்த அறிக்கை, ஸ்டெர்லைட் காப்பர் ஆலை, 'பசுமை' அடிப்படையில் மறுதொடக்கம் செய்ய வாய்ப்புள்ளது என்பதை சுட்டி காட்டுகிறது.இந்த அறிக்கை, 30 சதவீதம் செப்பு மறுசுழற்சியை உள்ளடக்கிய, ஒரு கலப்பின உற்பத்தி மாதிரியை பரிந்துரைக்கிறது. இதில், கசடு வெளியேற்றம் 15 சதவீதம்ஆகவும், அபாயகரமான கழிவுகள் 40 சதவீதம் ஆகவும் குறைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கிறது. இதன் அடிப்படை நோக்கம், தொழில் துறையில் ஒரு நிலையான நீடித்த அணுகுமுறையே தவிர, கடந்த கால உற்பத்தி முறைகளை மீண்டும் கடைபிடிப்பதற்கல்ல.இரண்டாவதாக, 2025 ஜூலை 21 அன்று, ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்கள், - துாத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஒன்றுகூடி, ஸ்டெர்லைட் உருக்காலையை மீண்டும் திறக்க கோரிக்கையிட்டனர். நாளிதழ்களில் வெளிவந்த செய்திகளின்படி ஒப்பந்ததாரர்கள், போக்குவரத்து அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் சிறு, குறு தொழில் முனைவோர் உள்ளிட்ட போராட்டக்காரர்கள், மேற்கூறிய நிபுணர் குழுவின் பரிந்துரை அறிக்கைக்கு, ஆதரவைத் தெரிவித்துள்ளனர். மேலும், நகரத்தின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒரு சாத்தியமான பாதையாகவும் பரிந்துரை அறிக்கை இருப்பதாக கருதினர்.சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் நாட்டின் சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்தில் 36 சதவீத பங்களிப்பை, ஸ்டெர்லைட் காப்பர் ஆலை அளித்து வந்தது. தற்போது, ஆண்டிற்கு நான்கு லட்சம் மெட்ரிக் டன் திறன் கொண்ட உருக்காலையின் பார்வை, சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகக் கொள்கைக்கு திரும்புகிறது. இரண்டாம் நிலையாகக் கருதப்பட்ட இந்தக் கொள்கை, இன்று பசுமை மற்றும் பழுப்புநிற தொழில் திட்டங்களின் நம்பகத்தன்மையை தீர்மானிக்கும் மையமாக உள்ளது. ஸ்டெர்லைட் காப்பர் 1997-ல், தேவையான அனைத்து ஒப்புதல்களுடன், அதாவது நிறுவ மற்றும் செயல்பட ஒப்புதல் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதிகளுடன் செயல்படத் துவங்கியது. 20 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பகுதிக்கு, ஒரு குறிப்பிடத்தக்க தொழில் துறையின் நங்கூரமாக செயல்பட்டது. மேலும், நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பையும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் செழித்து வளரவும் துணை நின்றது. லாரி தொழில் மற்றும் பாஸ்போரிக் மற்றும் சல்பியூரிக் அமிலம் போன்ற தாமிரத்தின் துணைப்பொருட்களின் விநியோகமும், உள்ளூரில் செயல்பட்ட துணை தொழில்களை மேம்படுத்த ஸ்டெர்லைட் ஆலை துணை நின்றது.

சுற்றுச்சூழல் செயல்திறன்

நிறுவனங்களுக்கான அரசின் கூற்றுப்படி, ஸ்டெர்லைட் ஆலை, சுற்றுச்சூழல் நெறிமுறைகளைப் பின்பற்றியது. இதில் ஆலையின் திரவ வெளியேற்றம், பூஜ்ஜியம் அளவு எனவும் சான்றளிக்கப்பட்டது. உமிழ்வு மற்றும் கழிவுகளை ஒழுங்குபடுத்த, தொடர்ச்சியான கண்காணிப்பு அமைப்புகள் நடைமுறையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.மேலும், ஆலை மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை நடைமுறைகளுக்காக தேசிய மற்றும் சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறது.

நேர்மறையான சமூக தாக்கம்

ஸ்டெர்லைட் காப்பரின் சமூக நலத்திட்டங்களில் குடிநீர் வழங்கல், சுகாதார பராமரிப்பு, உதவித்தொகைகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் மீனவர்களுக்கான வாழ்வாதார ஆதரவு போன்ற திட்டங்களும் அடங்கும். இதில் பெரும்பாலான நலத்திட்டங்கள், 2018-ல் ஆலை மூடப்பட்டு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்ந்ததாக, நிறுவனம் தெரிவிக்கிறது.

ஆலை நிர்வாகத்தில் உள்ளூர் மக்கள்

ஒரு நிர்வாக கண்ணோட்டத்தில், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் பொறுப்பு மற்றும் வழிமுறைகள், உரிய நிபுணர்கள் மூலம் நிர்வகிக்கப்பட்டு வந்தது. பணியாளர்கள், துாத்துக்குடி மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து பணியமர்த்தப்பட்டனர். ஆலையின் தலைவர் உள்ளூர்க்காரர். அவர், பொறியாளர் பதவியில் துவங்கி தலைமை இயக்க அதிகாரி வரை பதவி உயர்வுகளை வகித்து வருகிறார். இது, நிறுவனத்தின் உள்ளூர் ஒருங்கிணைப்பை அடிக்கோட்டிற்கு காட்டுகிறது.

மாறிவரும் கருத்துகள்

ஆலை திறப்பு ஏன் திருப்புமுனையாக இருக்கலாம்? சமீபகால நடவடிக்கைகள் அல்லது முன்னேற்றங்கள் முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன. பொதுமக்களின் வேண்டுகோள் காரணமாக ஒரு காலத்தில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, இப்போது திறப்பதற்கான கோரிக்கையாக ஏன் மாறியுள்ளது?இது, வெறும் தற்காலிக மாற்றமா அல்லது ஆழமான பொருளாதார மற்றும் சமூக அடித்தளங்களின் கவலையை குறிக்கும் அறிகுறியா? வழக்கறிஞரான நான், துறைகளுக்கு இடையேயான சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாக மதிப்பீடுகளில் பணியாற்றி, ஸ்டெர்லைட் காப்பர் வழக்கை கவனமாக பின்பற்றி, புறநிலைப் பகுப்பாய்வு மற்றும் உள்ளுர் உணர்வை அடிப்படையாகக் கொண்டு, பின்வரும் புலனாய்வு தரவுகளை வழங்குகிறேன்: * துாத்துக்குடியில் காற்று மற்றும் நீரின் தரம், ஆலை மூடப்பட்டதிலிருந்து, குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டவில்லை. எரிவாயு மற்றும் பட்டாசு ஆலைகள் உட்பட பிற உள்ளூர் தொழில்களில், தொழில் துறை விபத்துகள் தொடர்ந்து ஏற்படுகின்றன. இவற்றில், சில உயிர் இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. ஆனால், இதுபோன்ற அசம்பாவிதங்கள் எதுவும், ஸ்டெர்லைட்டில் நடக்கவில்லை* கடந்த, 2018ல் நடந்த சமூகப் போராட்டங்கள், ஆலையை மூட வழிவகுத்தாலும், ஆலை வழங்கிய நலத்திட்டங்களால் ஏற்பட்ட தாக்கத்தை ஈடுசெய்ய, மூடிய பின் சமூக ஆதரவு கட்டமைப்புகள் போதுமானதாக இல்லை* ஸ்டெர்லைட்டின் துணைப்பொருட்களை நம்பியிருந்த தொழில்கள் இடம் பெயர்ந்து விட்டன. இதன் விளைவாக, வேலை இழப்புகள் மற்றும் உள்ளுர் தொழில் துறைக்கு முதலீடுகள் குறைந்தன.* ஸ்டெர்லைட் விவகாரம் இனி, நீதிமன்றத்தின் விசாரணையில் இல்லாத நிலையில், மாநில அரசு இப்போது, சட்டக் கட்டுப்பாடுகள் இல்லாமல் தன் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளது. சமீபத்திய அமைதியான அணி திரட்டல்கள், பொதுமக்களின் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் குறிக்கின்றன. இது கவனத்தை ஈர்க்கிறது.

பங்குதாரர்களுக்கான பரிந்துரை

தமிழ்நாடு அரசுக்கு பொதுமக்களிடம் ஏற்படும் மனமாற்றங்கள், ஸ்டெர்லைட் காப்பர் இனி ஓரங்கட்டப்பட வேண்டிய ஒரு பிரச்னையல்ல என்பதை குறிக்கிறது. மீண்டும் ஆலையை திறப்பது பொது நலனுக்காக எனக் கருதப்பட்டால், தமிழக அரசு, அனைத்து பங்குதாரர்களுடனும், சமூக பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் நிபுணர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்களுடனும் வெளிப்படையான அணுகுமுறையுடன் பேச்சில் ஈடுபட வேண்டும்.சட்டப்பூர்வமாகவும், சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறும் முன்னேற்றத்திற்கான பாதையை ஆராய வேண்டும். நிபுணர் குழுவின் அறிக்கை மற்றும் 'பசுமை மறுதொடக்கம்' குறித்த பரிந்துரைகளை, அரசு ஒரு கருத்தாக பெற வேண்டும்.

மத்திய அரசுக்கு வேண்டுகோள்

சூரிய சக்தி பேனல்கள், காற்றாலைகள் மற்றும் மின்சார வாகனங்களுக்கு தாமிரம் ஒரு முக்கியமான உள்ளீடாக உள்ளது. உள்நாட்டு வினியோகம் தடைபட்டால் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை இலக்குகள் சமரசம் செய்யப்படலாம்.எதிர்க்கட்சிகளுக்கு அரசியலில் ஒருமித்த கருத்து மிகவும் முக்கியமானது. தேசிய பாதுகாப்பு விஷயங்களில், எதிர்க்கட்சிகளின் ஈடுபாட்டை போலவே சுற்றுச்சூழலின் பாதுகாப்பு, எதிர்க்கட்சிகளுக்கு மிக முக்கிய அம்சம்.தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் - கட்சி எல்லைக்கு அப்பால் - சமூகத்தின் நீண்டகால நலன்களுக்கு வழிவகுக்கும் தீர்வுகளை கண்டறிய ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதேபோல்,தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் உமிழ்வு கட்டுப்பாடுகள் நிபுணர் குழுவின் பரிந்துரைகளுடன் ஒத்துப்போகும் என்ற நிலைத்தன்மையை, ஸ்டெர்லைட் காப்பர் முன்கூட்டியே அவர்களுக்கு உறுதியளிக்க வேண்டும்.

மறு சீரமைப்பிற்கான காலம்

ஸ்டெர்லைட் காப்பர் மீண்டும் திறக்கப்படுமா அல்லது மூடப்பட்டிருக்குமா என்பது வெறும் சொல்லாடலை பொறுத்ததல்ல. மாறாக, பங்குதாரர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்புகளை பொருளாதார எதார்த்தங்களுடன் சமநிலைப்படுத்த ஒத்துழைக்க முடியுமா என்பதைப் பொறுத்தது. இதற்கு நீண்டகால நிலைப்பாடுகளை உருவாக்க வேண்டும். கொள்கை வகுப்பாளர்கள், தொழில் துறை மற்றும் சமூக மக்கள் ஒருங்கிணைந்து, ஒரு உருக்காலையின் கதவுகளை திறப்பது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கானோரின் நிலையான வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளையும் திறக்க முடியுமா என்பதுதான் இப்போது முக்கியம்.இரு துருவங்களை இணைப்பதற்கான நேரம் வந்துவிட்டது. நல்லிணக்கம் மற்றும் சமூக பொறுப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஸ்டெர்லைட் ஆலையின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும். - ஸ்ரீவர்தன் சின்ஹா - 'தேசாய் அண்டு திவான்ஜி' சட்ட நிறுவனத்தின் மூத்த பங்குதாரர். கட்டுரை தமிழாக்கம்: ஆர்.ரகுராமன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

Gajageswari
ஆக 30, 2025 06:22

ஆரஞ்சு குறியீடு அரசு அனுமதி பெற்ற தொழிற்சாலைகள் நிறுவ நக்சலைட்டுகள் திருப்பூர் தெற்கு மாவட்டத்தில். இவர்கள் மீது அரசு நடவடிக்கை இல்லை. மேலும் பல இடங்களுக்கு பரவும் ஆபத்து


Sathyan M
ஆக 29, 2025 22:26

இங்கு ஆலைக்கு ஆறுதல் சொல்லும் அறிவாளிகள் யாருமே அதன் அருகில் இல்லாதவர். இப்போது கடைபிடிப்பேன் கூவும் ஆலை. அப்போது என் கடை பிடிக்கவில்லை....இது கத்தியால் கொலை செய்தவன் தண்டனை கிடைத்தவுடன் சொன்னானா ..இப்போது கத்தி கொடு காய்கறி நறுக்கிறேன் ......


M Ramachandran
ஆக 29, 2025 21:35

மக்கள் திருந்த வேண்டும். இந்த திருட்டு கட்சியை சேர்ந்த சுய நல கும்பல் காசு கிடைக்குதுனா ஏதில் கண்டாலும் துடைத்து விட்டு பைய்க்குள் திணித்து கொள்வான். தற்போனது உள்ள சில கட்சிகளின் பிழைப்பு இப்படித்தான். அதஹிய்ய கண்டவுடன் சினிமாவருமாந்தியய விடா லாபம் போல யிருக்கேனென நுழஞ்சிஞ்சிட்டான். யேஆமந்த சோழன் கிரியன்ங்கள் இந்த தமிழ் நட்டான் தலையாய்ய்ய தடவ தலையாய்ய்ய குடுத்திடுவான் ஏமாறி கும்மி அடிப்போம்னு முன் வந்துடறான்ங்கள். முதல்பொஆடாமல் கொள்ளையடிக்க வென்று இஙகு ஒரு குடும்ப காட்சியய்ய்ய பார்த்து பல திருடன் ங்களுக்கு நாக்கில் எச்சிலூரி வந்துடறான்ங்கள். சினிமாவில் சந்தப்பிப்பது அரசியலிய்ய விட எழிது. அப்புறம் கைய்யாய்ய்ய சுட்டு கொண்ட வுடன் தான் தெரியும். அங்கு காலை தூக்கி கதாநாயிகின் இதுஒப்பைய்ய தடவி தூக்கி இருப்பின் முகம் வைத்து வாசம் பார்த்து அப்புறம் கலர் காகிதம் சுத்தியை அட்டை கத்தியை இஙகு அலகு சுத்தி தன தலை மேல் படாமல் பல டேக்குகள் வாங்கி படத்திற்கு பணம் கொட்டி ாலும் ம்முதலாளி ? மூஞ்சி அஷ்ட கோலணலாகி வயிற்றில் நெருப்பு கட்டிக்கொண்டு டஹ்விக்கும் அவரைய்ய கண்டு கொள்ளாமல் பல டேக்குகள் வாங்கி புடுங்கிகிய பணத்தை கூட இடுப்பை கிள்ளி கிளு கிளுக்க செய்த நடிகைய்யக்கு பெரிய தொகையில் ஒரு தோராட்ட வீடு வாங்கி கொடுத்து ஆனந்தமாய் யிருப்பதைய்ய விட்டு அரசியல் எல்ல எதற்கு.எதற்கும் ஜாக்கிரத்திய அரசியலில் ஏதாவது அரசியல் கட்சி கார்னைய்ய ஏற்காத கூட மகபேராசை அவனுடைய கட்சி 200 ஊபீஸ் நிஜமாக வில்லனாகி மாரி செறிவு விட்டு பொஆயிட போறன்.சொகுசா வாழ்ந்த இந்த உடல் கடைய்யசியில் கூறு போடவா?


உண்மை கசக்கும்
ஆக 29, 2025 21:22

அந்த காலத்தில் மிக பெரிய சவுண்டு விட்ட கனி எங்கே?


Kulandai kannan
ஆக 29, 2025 20:00

ஸ்டெர்லைட் நிர்வாகமே, ஜாக்கிரதை. 2026ல் எதிர்கட்சியான பிறகு இதே திமுக ஆலைக்கு உலை வைக்கும்.


Santhakumar Srinivasalu
ஆக 29, 2025 19:15

தமிழ் நாட்டின் எதிர்கால தொழில் துறையை கருத்தில் கொண்டு கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து ஆலை இயங்க அரசு பேச்சு வார்த்தை நடத்தி ஆவண செய்ய வேண்டும். ஏற்கனவே காப்பர் சார்ந்த தொழில்கள் வேறு மாநிலத்திற்கு சென்று விட்டன!


Varadarajan Nagarajan
ஆக 29, 2025 18:57

உலகத்தில் எல்ல நாடுகளிலும் தொழிற்ச்சாலைகள் உள்ளன. குடியிருப்புகளையும் உள்ளன. தொழிற்பேட்டைகளின் அருகில் குடியிருப்புகளுக்கு அனுமதியில்லை. ஆனால் நமது அரசிடம் அதுபோன்ற ஒருங்கிணைந்த திட்டங்கள் இல்லை. சென்னையில் அம்பத்தூர், கிண்டி, பள்ளிக்கரணை போன்ற இடங்கள் தொழிற்பேட்டையாக தொடங்கப்பட்ட பகுதி. அங்கு தொழிற்சாலைகள் தொடங்கப்பட்ட பிறகு அதை சுற்றிலும் தற்பொழுது குடியிருப்பு பகுதிகள் நிரம்பியுள்ளது. இதற்க்கு அனுமதி அளித்துவிட்டு பிறகு அங்குள்ள பொதுமக்கள் ஏதோ ஒரு காரணத்திற்க்காக ஒரு குற்றசாட்டைவைத்தால் அந்த நிர்வாகம் ஆளும்கட்சிக்கு வேண்டாததாக இருந்துவிட்டால் உடனே மாசு கட்டுப்பாட்டு நிறுவனத்தின்மூலம் நடவடிக்கை எடுத்து மூடிவிடலாம். பொதுமக்களிடமிருந்து குற்றசாட்டு வந்தால் அதன்மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை என்பது தொழில்துறையை மிரட்டுவதற்கு நல்ல ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் அந்த தொழிலிலை தொடங்கும் முன் அனைத்து விபரங்களையும் பெற்றுத்தான் அதே வாரியம் அனுமதி அளிக்கின்றது. அதுபோலத்தான் இந்த ஸ்டெர்லிட் ஆலையும் மூடப்பட்டது. அந்த ஆலையை மூடியே தீருவோம் என அரசியல் கட்சியும் கங்கணம் கட்டிக்கொண்டு வேலைசெய்தது. ஆனால் தற்பொழுது அந்நிய முதலீடுகளை ஏற்பதாக கூறுகின்றது.


Rathna
ஆக 29, 2025 18:40

தனியார் நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட கேட்கப்பட்ட தொகை வருடா வருடம் ஒரு கட்சிக்கு போய் சேரவில்லை என்பதால் அதை சமூக பிரச்சனையாக மாற்றப்பட்டு அந்த நிறுவனத்தையே மூடுவது, அந்த நகரத்தின் மக்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்குவது காலம் காலமாக நடக்கிறது. இது மாதிரி ஒரு பிரச்னை கூடங்குளத்தில் ரஷ்யா அணு உலை என்பதால் அமெரிக்காவில் படித்த ஒரு உள்ளூர் மதமாற்றியால், ஒரு நல்ல தொகை லாபத்தில் அந்த நபரால் நடந்தது. ஆனால் ரஷ்யாகாரன் தன்னை எதிர்த்தவனை ஹோட்டலுக்கு கூடி சென்று 15 மாடியில் இருந்து கதையை முடிப்பவன் என்பதால் பயந்து ஓடி ஒளிந்து கொண்டான். சாதக பாதகங்களை அரசியல் சம்பந்தம் இல்லாத நிபுணர்களால், உள்ளூர் மக்களுக்கு ஆபத்து இல்லாத வகையில் திறப்பதே நல்லது. தாமிரம் என்பது அடுத்த தங்கம். அடுத்த 25 ஆண்டுகளில் அதன் மதிப்பு தங்கத்தை போல விலை உயரும். இந்த நிறுவனத்தை ராஜஸ்தான் அல்லது குஜராத்ற்கு கொண்டு சென்றால் நமக்கு மிக பெரிய வருவாய், வாழ்வாதார இழப்பு ஏற்படும்.


Santhakumar Srinivasalu
ஆக 29, 2025 19:07

முற்றிலுமாக உண்மை!


என்றும் இந்தியன்
ஆக 29, 2025 17:54

மிக மிக மிக எளிதான சொல் இது நம்ம உண்ணுவது உணவு வெளியேற்றுவது கழிவு. ஐயோ இதை வெளியேற்றி ஆஸம் எய்து விட்டார்களே என்று அழுவது அறிவிலித்தனமானது ஆகவே நாம் உணவு உண்ணக்கூடாது???அப்படித்தானே??இந்த ஒரு தொழிற்சாலையிலும் Product ஒன்று என்றால் Byproduct, Waste நிச்சயம் இருக்கும். அதுவும் தாமிரம் உற்பத்தி செய்யும்போதும் அதே. தாமிரம் இந்தியாவில் வேறு மாநிலங்களில் உலகில் பல இடங்களில் உற்பத்தியாகின்றதே???அதை ஏன் மூடவில்லை??? அதற்காக செலவு செய்து Pollution control செய்வது இயல்பான நடவடிக்கை. இந்த மூடல் எதனால் வந்தது???1 வெளிநாட்டு முதலாளிகள் காசு கொடுத்து இந்த மூடல் நடவடிக்கை மக்கள் மூலமாக செய்ய வைத்தது. 2 அவர்கள் தாமிர வியாபாரம் இந்த தாமிரஉற்பத்தியால் தடைபட்டுப்போனதால் அவர்கள் கூட்டு சேர்ந்து இப்படி செய்தது. ஆகவே இந்த தொழிற்சாலை நிச்சயம் தொடங்கப்படவேண்டும் தகுந்த Pollution Control Measures எடுத்துக்கொண்டு அவ்வளவே


Aariya Rajan
ஆக 29, 2025 16:54

வணக்கம், ஸ்டெரிலைட் மிகவும் மோசமான கம்பெனி, கிரௌண்ட் வாட்டர் முற்றியும் விஷமாக்க பட்டுள்ளது, வேற ஸ்டேட் பொய் ஓபன் பண்ணிக்கோங்க. மேலும் லோக்கல் இருந்து யாரும் வேலைக்கு வைக்கல ஏன்னா அவங்க அங்கவுள்ள பிரச்சனை வெளிய சொல்லிடுவாங்குன்னு, இந்த கம்பெனி 100% danger தூத்துக்குடி ல இப்ப தன


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை