வாசகர்கள் கருத்துகள் ( 13 )
அமர்நாத் இராமகிருஷ்ணன் இன்னும் பனியில் தானே உள்ளார்? அவர் கூறுவது தவறென்றால், அவரிடம் நேரிடையாக விளக்கம் கேட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்கலாமே இந்திய அரசு, அவ்வளவு நல்ல அரசா? வடக்கு, தெற்கு என பிரிப்பது தவறு என கதறுபவர்களின் வாயிலிருந்தே, வடக்கு தெற்கு என வரவழைத்து விட்டார் அமர்நாத் இராமகிருஷ்ணன்.
ஒன்று மட்டும் புரியவில்லை. துருக்கி, கிரேக்கம் போன்றவர்கள்அவர்கள் வரலாற்றின் காலங்களை கி மு 3000 /4000 என்று சர்வசாதரணமாக பேசிக்கொண்டிருக்கும்போது, இவர்கள் ஏன் வெறும் கி மு 300 க்கும் 600க்கும் இவ்வளவு அடித்துகொண்டுருக்கிறார்கள்? கி மு 300 காலங்களில் ஜைன மற்றும் புத்த மதங்கள் பிறந்துவிட்டன. தமிழனின் நாகரீகம் இந்தியாவின் மற்ற பகுதிகளைவிட மிக பழமையானது என்று சொல்ல விழையும் நாம், ஏன் கி மு 300 க்கே சரியான ஆவணங்களை சமர்ப்பிக்காமல் பல்ப் வாங்குகிறோம்? சரி கீழடி ஒன்று தான் நாகரீகத்தின் இடமா? ஆதிச்சநல்லூர் பொற்கை போன்ற மற்ற இடங்கள் மேலும் பழமை சான்றுகளோடு இருக்கின்றனவே? பார்க்கப்போனால், தாமிரபரணி வைகை ஆறுகரைகளில் கடல் வரை எண்ணற்ற சான்றுகள் கிடைக்குமே? மாநில தொல்துறை அமைப்பு ஏன் அவற்றை சற்றே உற்று நோக்கி ஆய்வுகளை மேற்கொள்ளக்கூடாது? திருக்குறளே 2000 வருடதிற்கு முன் எழுதியது என்று கூறும் நாம், அக்குரள்களில் கூறப்பட்டிருக்கும் அறிவாய்ந்த மேன்மையான கருத்துக்கள் அந்த காலகட்டத்திலேயே திருவள்ளுவருடைய சிந்தனைகளில் வரமுடியுமென்றால், அந்த சமுதாயம் அப்போதே குறைந்தது 2000 வருஷங்கள் வாழ்ந்திருக்கவேண்டும். மேலும் முதல் தமிழ் சங்கம் மற்றும் அதன் இலக்கியங்களும் தமிழ் நாகரீகத்தின் கால நிர்ணயம் 5000 வருடங்களுக்கு அதிகமாக இருக்கவேண்டும் என்பதையே உணர்த்துகின்றன.
துருக்கி உள்ளிட்ட நாடுகள் நாகரிகத்தின் தொன்மையை எடுத்துக்கூறுகின்றன. நாம் மொழியின் தொன்மையை நிரூபிக்க முயல்கிறோம். அங்கேதான் பிரச்சனை. விடையை எழுதிக்கொண்டு பதிலை தேடக்கூடாது. ஆனால் அதைதான் நாம் செய்கிறோம். திருக்குறள் தமிழரின் சிந்தனையிலிருந்து உதித்த நூல் அல்ல. அது வேத கருத்துக்களை உள்வாங்கி தமிழில் எழுதப்பட்டது. அதனால்தான் திருவள்ளுவ மாலையில் "ஏழ்கடலை புகட்டி" குறுக தரித்த குறள் என்று புகழப்பட்டது.
தமிழர் நாகரிகம்னு சொல்லி பலரும் ஊழல் பண்ண வழி கிடைச்சுருச்சு. ஆனா ஊழல் தமிழர் நாகரிகம் இல்லை.
கல்லும் மண்ணும் கரித்துண்டும் காலணாவுக்கு, கால் நயா பைசாவுக்கு பயனற்றது. இவைகளை வைத்துக்கொண்டு காலத்தை அளவிடுவது ஹிமாலய புரளி.
திராவிட பூமிக்கு மேல குழப்பம் செய்து முடிச்சாச்சு. இன்னும் 6 மாசத்துல பூமிக்கு கீழேயும் பித்தலாட்டம் பண்ணினா தான் பல தலைமுறைக்கு திமுக பெயர் நிலைக்கும்.
ஆபீசர் ஆபீசர் , இது அப்படியே துவாரக அகழ்வாராச்சிக்கும், இல்லாத சரஸ்வதி ந்தி அகழ்வாராய்ச்சிக்கும் பொருந்துமா ஆபீசர்.
பூம்புகார்க்கு நன்கு பொருந்தும்.
கம்பனை விஞ்சிய எவ்வகையான கற்பனை அறிக்கையையும் மத்திய அரசு ஏற்காது. ஆரியப் படையெடுப்பை பொய் வரலாறு என்று ஆதாரங்களுடன் விளக்கினார் (தற்போது திமுக போற்றும்) டாக்டர் அம்பேத்கர். ஆனால் சங்க இலக்கியம் எதுவுமே குறிப்பிடாத திராவிடத்தை வைத்து ஊழல் அரசியல் நடக்கிறது.
இவ்வளவு சொல்லும் நபர் ஏன் ஓன்றிய அரசை கீழடி அறிக்கையை வெளியிட கூறவில்லை கார்பன் டேட்டிங் சொன்ன அமெரிக்க நிறுவனத்திடம் விளக்கம் கேட்டாரா
சத்தம் பலமா இருக்கே.....
இப்படி அறிவியல்பூர்வமாக காலத்தை, அந்த கீழடி நாகரிகத்தின் உண்மையான ஆண்டுகளை நிரூபிக்காமல், நிரூபிக்கும் வழி வகை செய்யாமல், மத்திய அரசு கீழடி அகழ்வாராய்ச்சியை கண்டு கொள்ளவில்லைன்னு நாடகம் ஆட வேண்டியது, இப்பிடியே போனால், நாளை உலக அளவில் தமிழ்நாட்டின் அகழ்வாராய்ச்சிகளை, எந்த நாடும் நம்பாது, ஏற்று கொள்ளாது, அது மட்டும் இல்லை, சிரிப்பா சிரித்து, வரலாறு என்பது சும்மா வாய் ஜால வித்தை இல்லை, அடிச்சு விடுறதுக்கு, அறிவியல் பூர்வமாக நிரூபிக்க பட ஆயிரம் வழி முறைகள் இன்று நடைமுறைக்கு வந்தாச்சு, அதை சரியாக செய்வித்து, தமிழனின் பெருமையை பதிவு செய்யும் கடமை தமிழக அரசுக்கு உள்ளது, இந்த ஆராய்ச்சிக்கு ஒதுக்க படுகிற நிதி எல்லாம் அரசியல் வாதிகளின் கசானாவிற்கு போனால், இப்படி வாய் ஜாலம் மட்டும் தான் பேசி கொண்டு , மத்திய அரசை குற்றம் குறை சொல்லி கொண்டு திரிவார்கள்.....வெட்க கேடான அரசு.வெட்கமில்லாத அரசியல் வாதிகள்.