உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சிந்தனைக் களம் / அகழாய்வு படும்பாடு

அகழாய்வு படும்பாடு

தொல்லியல் ஆய்வானது தேசிய, பிராந்திய இனவாதத்தின் கருவியாக மாறக்கூடாது. இது, வடக்கிற்கும் பொருந்தும்; தெற்கிற்கும் பொருந்தும். ராஜஸ்தானின் பஹாஜ் மற்றும் ஹரியானாவின் ராகிகடியில் நடந்த அகழாய்வுகளில் பல போதாமைகள் உள்ளன. தமிழகத்தின் கீழடியிலும், சிவகளையிலும் நடந்த அகழாய்வுகள் குறித்தும் எனக்கு பல கேள்விகள் உள்ளன. கீழடி: கீழடியின் ஆய்வுகளை முன்னிட்டு தமிழக அரசு, 'கீழடி: வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்' என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது. அதாவது, சங்க காலத்தில் வைகை நதிக்கரையில் அமைந்த ஒரு நகர்ப்புற நாகரிக குடியேற்றம் என பொருள் கொள்ளலாம். அந்தப் புத்தகத்தில், 'கீழடியில் பொ.மு., 580ம் ஆண்டைச் சார்ந்த தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானைத் துண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இது, இந்தியாவில் முதன்முதலாக தமிழ் நிலப்பரப்பில் எழுத்துரு தோன்றியதைக் குறிக்கிறது' என்று சொல்கிறது.

கலைப்பொருட்கள்

கீழடி, கி.மு., ஆறாம் நுாற்றாண்டு என்று தமிழக அரசு எவ்வாறு சொல்கிறது? அதில் கிடைத்திருக்கும் கலை பொருட்களின் காலம் துல்லியமாக அளவிடப்பட்டதாலா, நிச்சயம் இல்லை. கீழடி யின் பானைத் துண்டுகளின் காலக்கணிப்பிற்கு, ஆய்வாளர்கள் கரிம பகுப்பாய்வு முறையை பின்பற்றியுள்ளனர். ஆனால், பானைத் துண்டுகள் பகுப்பாய்வு செய்யப்படவில் லை. அதே மண்ணடுக்கிலிருந்து சேகரிக்கப்பட்ட கரித்துண்டுகள் தான், கரிம பகுப்பாய்வு செய்யப்பட்டன. இந்த உண்மை மக்களுக்குச் சென்றடையவில்லை. இப்பகுப்பாய்வு, கரித்துண்டாக மாறிய ஒரு மரம், எ வ்வளவு ஆண்டு களுக்கு முன் இறந்தது என்பதை மட்டுமே தரும். இக்காலத்தை, பானைத் துண்டுகளின் மீது அப்படியே ஏற்றுவது, அறிவியல்பூர்வமான முறையல்ல. இந்த ஆண்டு கணக்கு மட்டுமே அத்தளத்தின் தொன்மையைச் சுட்டாது. தொல்லியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்ட மண்ணடுக்கிலிருந்த கலைப்பொருட்கள் அந்த கரித்துண்டின் சம காலத்தவையா என்பதை, பல மற்றைய ஆதாரங்களைக் கவனத்தில் கொண்டே தீர்மானிக்க முடியும். இவ்வாறு செய் யப்படவில்லை. கீழடியில் தோண்டி எடுத்த கரித்துண்டுகளில் ஒன்றின் காலம் கி.பி., 206க்கும் 345க்கும் இடைப்பட்டது என்று அறியப்பட்டுள்ளது. இது, கணக்கிலேயே எடுத்துக் கொள்ளப்படவில்லை. மேலும் தொல்லியல் ஆய்வாளர்கள், ஒரே அடுக்கில் கிடைத்த கலைப்பொருட்கள் ஒரு காலப்பகுதியைச் சேர்ந்தவை எனக் கூற இயலுமே தவிர, துல்லியமாக அதன் வயதை அளவிட முடியாது. இதே தவறான கால கணக்கீட்டு முறை, கீழடி தொல்லியல் ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளரும் அவரது சக பணியாளரும், ஆங்கில பத்திரிகை ஒன்றில் எழுதிய ஒரு கட்டுரையில் முன்வைக்கப்பட்டுள்ளது: அக்கட்டுரையின்படி, கீழடியில் தோண்டியதில் கிடைத்த மண்ணடுக்குகளில் 200 முதல் 353 செ.மீ., வரை கீழடுக்கில் கண்டறியப்பட்ட அனைத்து கலைப் பொருட்களும், கி.மு., 580 ஆண்டைச் சார்ந்தவை. ஆனால், 200 செ.மீ., க்கு மேலே உள்ள மைய அடுக்கின் கலைப்பொருட்கள் கி.மு., 3ம் நுாற்றாண்டிலிருந்து கி.பி., 1ம் நுாற்றா ண்டைச் சேர்ந்தவை. அதாவது, ஓர் அடுக்கில் காணப்படும் கலைப்பொருட்கள் அனைத்தும், ஒரே ஆண்டைச் சார்ந்தவை. ஆனால், அதற்கு சற்றே மேலே உள்ள அடுக்கின் கலைப் பொருட்கள், 2 நுாற்றாண்டு காலத்துக்குப் பரந்து விரிந்தவை என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த காலக் கணக்கீட்டு முறை, அறிவியல்பூர்வமானது அல்ல என்பதோடு, பிழையானதும் ஆகும். சிவகளை சிவகளையிலும் இதே உத்தி கையாளப்பட்டிருக்கிறது. புதைகுழிகளில் கிடைத்த கரித்துண்டின் காலம் ஈமத்தாழிகளில் கிடைத்த இரும்பின் மீது ஏற்றப்பட்டிருக்கிறது. இந்தக் காலக் கணக்கீட்டு முறை, கு றைபாடுடையது. இதற்கு ஆதாரமாக, அமெரிக்காவின் அரிசோனா மாகாண பல்கலை பேராசிரியர் டேவிட் கில்லிக்கின் கட்டுரை ஒன்று இருக்கிறது. அதில் அவர், கரித்துண்டின் வயதை கலைப்பொருட்களின் மீது ஏற்றும் முறை சரியானதன்று குறிப்பிட்டிருக்கிறார். இதை, என் ஆய்வுக்கு ஆதாரமாக எடுத்துச் சொன்னபோது, ஆச்சரியமான அம் சம் ஒன்று நடைபெற்றது. என் கருத்தை மறுக்கும் வகையில், சிவகளையில் கிடைத்த கரித்துண்டுகளின் காலமும் இரும்பு பொருட்களின் காலமும் ஒன்றாகக் கருத முடியும் என்ற கருத்தை அதே பேராசிரி யர் சொல்லும் கட்டுரை ஒன்று வெளியானது. நான் உடனடியாக பேராசிரியரி டம் விளக்கம் கேட்டேன். நான் அவரிடம், கரித்துண்டுகள் ஈமத்தாழிகளுக்கு உள்ளே கிடைக்கவில்லை; புதைகுழிகளில் கிடைத்துள்ளன. எனவே அதன் காலத்தை இரும்பின் மீது ஏற்று வது சரியாகாது எனக் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு அவர், 'நீங்கள் இக்கேள்விகளை, அவ்விடத்தை அகழ்ந்த தொல்லியல் ஆய்வாளர்களிடம் கேட்க வேண்டும்' என்று பதிலளித்திருந்தார். தொல்லியல் ஆய்வாளர்களிடம் கேட்டும் அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. காரணம், கேள்விக்கு அறிவியல்பூர்வமாகப் பதில் சொல்ல முடியாது. தமிழின் தொன்மையை நான் கேள்விக்கு உள்ளாக்குகிறேனா? நிச்சயம் இல்லை. நான் கீழடி மற்றும் சிவகளை ஆய்வுகள் முக்கியமானவை அல்ல எனக் கூறவில்லை. இடுகாடு அல்லாத தளத்திலிருந்து ஏராளமான கலைப்பொருட்கள் அகழ்வாய்வில் சேகரிக்கப்பட்ட வகையில், கீழடி முக்கியமானது. இதுபோன்றே, தமிழத்தில் வேளாண்மை, நாம் முன்பு நினைத்திருந்ததை விட முன்னதாகவே துவங்கியதை சிவகளை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் தமிழ் மொழியின் தொன்மையை நிறுவ அறிவியலுக்கு ஒத்துவராத முயற்சிகளை மேற்கொள்வது வருந்தத்தக்கது. இப்போதைய அவசரத்தேவை, சமரசங்கள் ஏதுமற்ற அறிவியல்பூர்வமான பகுப்பாய்வுகளே. ராகிகடி மற்றும் பஹாஜில் நடைபெறும் ஆய்வுகளுக்கும் இதே நடைமுறையையே பின்பற்ற வேண்டும். இந்திய பண்பாட்டின் தொன்மை ஐயத்திற்கு இடமில்லாதது. அதுபோலவே, தமிழ் மொழியும், உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்று. தமிழ் பண்பாடும் உலகளவில் புகழ் பெற்றதே. அறிவியல்பூர்வமாக நிறுவ இயலாத கூற்றுகள் இத்தொன்மையை பறைசாற்ற பயன்படுத்தக் கூடாது. தொல்லியல் ஆய்வானது தேசிய, பிராந்தியவாதிகளின் கருவியாக மாறிவிடக்கூடாது. - பி.ஏ.கிருஷ்ணன், எழுத்தாளர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

SRP Jaya Kumaar
அக் 09, 2025 15:15

அமர்நாத் இராமகிருஷ்ணன் இன்னும் பனியில் தானே உள்ளார்? அவர் கூறுவது தவறென்றால், அவரிடம் நேரிடையாக விளக்கம் கேட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்கலாமே இந்திய அரசு, அவ்வளவு நல்ல அரசா? வடக்கு, தெற்கு என பிரிப்பது தவறு என கதறுபவர்களின் வாயிலிருந்தே, வடக்கு தெற்கு என வரவழைத்து விட்டார் அமர்நாத் இராமகிருஷ்ணன்.


Sridhar
அக் 09, 2025 15:05

ஒன்று மட்டும் புரியவில்லை. துருக்கி, கிரேக்கம் போன்றவர்கள்அவர்கள் வரலாற்றின் காலங்களை கி மு 3000 /4000 என்று சர்வசாதரணமாக பேசிக்கொண்டிருக்கும்போது, இவர்கள் ஏன் வெறும் கி மு 300 க்கும் 600க்கும் இவ்வளவு அடித்துகொண்டுருக்கிறார்கள்? கி மு 300 காலங்களில் ஜைன மற்றும் புத்த மதங்கள் பிறந்துவிட்டன. தமிழனின் நாகரீகம் இந்தியாவின் மற்ற பகுதிகளைவிட மிக பழமையானது என்று சொல்ல விழையும் நாம், ஏன் கி மு 300 க்கே சரியான ஆவணங்களை சமர்ப்பிக்காமல் பல்ப் வாங்குகிறோம்? சரி கீழடி ஒன்று தான் நாகரீகத்தின் இடமா? ஆதிச்சநல்லூர் பொற்கை போன்ற மற்ற இடங்கள் மேலும் பழமை சான்றுகளோடு இருக்கின்றனவே? பார்க்கப்போனால், தாமிரபரணி வைகை ஆறுகரைகளில் கடல் வரை எண்ணற்ற சான்றுகள் கிடைக்குமே? மாநில தொல்துறை அமைப்பு ஏன் அவற்றை சற்றே உற்று நோக்கி ஆய்வுகளை மேற்கொள்ளக்கூடாது? திருக்குறளே 2000 வருடதிற்கு முன் எழுதியது என்று கூறும் நாம், அக்குரள்களில் கூறப்பட்டிருக்கும் அறிவாய்ந்த மேன்மையான கருத்துக்கள் அந்த காலகட்டத்திலேயே திருவள்ளுவருடைய சிந்தனைகளில் வரமுடியுமென்றால், அந்த சமுதாயம் அப்போதே குறைந்தது 2000 வருஷங்கள் வாழ்ந்திருக்கவேண்டும். மேலும் முதல் தமிழ் சங்கம் மற்றும் அதன் இலக்கியங்களும் தமிழ் நாகரீகத்தின் கால நிர்ணயம் 5000 வருடங்களுக்கு அதிகமாக இருக்கவேண்டும் என்பதையே உணர்த்துகின்றன.


Aarthi Natarajan Sivaprakasam
அக் 13, 2025 06:58

துருக்கி உள்ளிட்ட நாடுகள் நாகரிகத்தின் தொன்மையை எடுத்துக்கூறுகின்றன. நாம் மொழியின் தொன்மையை நிரூபிக்க முயல்கிறோம். அங்கேதான் பிரச்சனை. விடையை எழுதிக்கொண்டு பதிலை தேடக்கூடாது. ஆனால் அதைதான் நாம் செய்கிறோம். திருக்குறள் தமிழரின் சிந்தனையிலிருந்து உதித்த நூல் அல்ல. அது வேத கருத்துக்களை உள்வாங்கி தமிழில் எழுதப்பட்டது. அதனால்தான் திருவள்ளுவ மாலையில் "ஏழ்கடலை புகட்டி" குறுக தரித்த குறள் என்று புகழப்பட்டது.


Govind
அக் 08, 2025 20:58

தமிழர் நாகரிகம்னு சொல்லி பலரும் ஊழல் பண்ண வழி கிடைச்சுருச்சு. ஆனா ஊழல் தமிழர் நாகரிகம் இல்லை.


rama adhavan
அக் 08, 2025 20:11

கல்லும் மண்ணும் கரித்துண்டும் காலணாவுக்கு, கால் நயா பைசாவுக்கு பயனற்றது. இவைகளை வைத்துக்கொண்டு காலத்தை அளவிடுவது ஹிமாலய புரளி.


ManiK
அக் 08, 2025 15:39

திராவிட பூமிக்கு மேல குழப்பம் செய்து முடிச்சாச்சு. இன்னும் 6 மாசத்துல பூமிக்கு கீழேயும் பித்தலாட்டம் பண்ணினா தான் பல தலைமுறைக்கு திமுக பெயர் நிலைக்கும்.


kannan
அக் 08, 2025 13:45

ஆபீசர் ஆபீசர் , இது அப்படியே துவாரக அகழ்வாராச்சிக்கும், இல்லாத சரஸ்வதி ந்தி அகழ்வாராய்ச்சிக்கும் பொருந்துமா ஆபீசர்.


ஆரூர் ரங்
அக் 08, 2025 15:59

பூம்புகார்க்கு நன்கு பொருந்தும்.


ஆரூர் ரங்
அக் 08, 2025 12:28

கம்பனை விஞ்சிய எவ்வகையான கற்பனை அறிக்கையையும் மத்திய அரசு ஏற்காது. ஆரியப் படையெடுப்பை பொய் வரலாறு என்று ஆதாரங்களுடன் விளக்கினார் (தற்போது திமுக போற்றும்) டாக்டர் அம்பேத்கர். ஆனால் சங்க இலக்கியம் எதுவுமே குறிப்பிடாத திராவிடத்தை வைத்து ஊழல் அரசியல் நடக்கிறது.


Infomation Technology Officers ASSOCIATION Tamilnadu Municipal Dept
அக் 08, 2025 08:19

இவ்வளவு சொல்லும் நபர் ஏன் ஓன்றிய அரசை கீழடி அறிக்கையை வெளியிட கூறவில்லை கார்பன் டேட்டிங் சொன்ன அமெரிக்க நிறுவனத்திடம் விளக்கம் கேட்டாரா


சண்முகம்
அக் 08, 2025 08:09

சத்தம் பலமா இருக்கே.....


Anonymous
அக் 08, 2025 07:58

இப்படி அறிவியல்பூர்வமாக காலத்தை, அந்த கீழடி நாகரிகத்தின் உண்மையான ஆண்டுகளை நிரூபிக்காமல், நிரூபிக்கும் வழி வகை செய்யாமல், மத்திய அரசு கீழடி அகழ்வாராய்ச்சியை கண்டு கொள்ளவில்லைன்னு நாடகம் ஆட வேண்டியது, இப்பிடியே போனால், நாளை உலக அளவில் தமிழ்நாட்டின் அகழ்வாராய்ச்சிகளை, எந்த நாடும் நம்பாது, ஏற்று கொள்ளாது, அது மட்டும் இல்லை, சிரிப்பா சிரித்து, வரலாறு என்பது சும்மா வாய் ஜால வித்தை இல்லை, அடிச்சு விடுறதுக்கு, அறிவியல் பூர்வமாக நிரூபிக்க பட ஆயிரம் வழி முறைகள் இன்று நடைமுறைக்கு வந்தாச்சு, அதை சரியாக செய்வித்து, தமிழனின் பெருமையை பதிவு செய்யும் கடமை தமிழக அரசுக்கு உள்ளது, இந்த ஆராய்ச்சிக்கு ஒதுக்க படுகிற நிதி எல்லாம் அரசியல் வாதிகளின் கசானாவிற்கு போனால், இப்படி வாய் ஜாலம் மட்டும் தான் பேசி கொண்டு , மத்திய அரசை குற்றம் குறை சொல்லி கொண்டு திரிவார்கள்.....வெட்க கேடான அரசு.வெட்கமில்லாத அரசியல் வாதிகள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை