உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சிந்தனைக் களம் / சிந்தனைக்களம்:மத சார்பற்ற என்றல்ல மத ஏற்பு என மாற்றுங்கள்!

சிந்தனைக்களம்:மத சார்பற்ற என்றல்ல மத ஏற்பு என மாற்றுங்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உலக அளவில் சிறுபான்மை, அதாவது, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், இலங்கை ஆகியவற்றை உள்ளடக்கிய முந்தைய அகண்ட பாரதத்தில் பெரும்பான்மையாக இருந்து, தற்போது இந்திய அளவில் மட்டும் பெரும்பான்மை என்றழைக்கப்படுபவர்கள், மேற்கூறப்பட்ட மற்ற பகுதிகளில் சிறுபான்மையினராக உள்ளனர்.இந்த சனாதன பெரும்பான்மை, சைவம், வைணவம், சாக்தம், கவுமாரம் என்று வகைப்படுத்தப்பட்டு, வேற்றுமையில் ஒற்றுமையாய் வாழ்ந்து வந்தது. இந்த ஒற்றுமையில் உலை வைக்க, ஐரோப்பியர்களால் ஹிந்து என்று பெயர் மாற்றியதையும் பொறுத்து கொண்டது. இவர்கள், ஹிந்து என்ற மதத்தவர் கிடையாது; மதம் பிடித்தவர்களும் அல்ல. சனாதன வாழ்வியல் நெறியில் வாழ்பவர்கள்.

'டிவைடு அண்டு ரூல்'

இவர்களிடையே எழுவது சண்டை இல்லை; சச்சரவு தான். பொன்னியின் செல்வன் கதையில், ஆழ்வார்க்கடியான் - சிவாச்சாரியார் சண்டை போல, காமெடியாக தான் இருக்கும்.சொல்லப்போனால், அரசியல்வாதிகள், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - காங்கிரஸ் என, மாறி மாறி தன் கலரை மாற்றுவது போல, இவர்கள் மாறிக் கொண்டிருப்பர்; அவ்வளவு தான்! ஆனால், மற்ற வழிபாட்டு தலங்களை, இவர்கள் அடித்து உடைத்து நொறுக்கியதில்லை.இப்படிப்பட்ட அமைதியான, மற்ற சமயங்களை ஏற்றுக் கொள்ளுதல் என்ற பரந்த மனப்பான்மையில் இருப்பவர்கள், இங்கு பெரும்பான்மையாக இருப்பதால் தான், இங்கு ஜனநாயகம் என்ற மரம் தழைத்து வளர்ந்தோங்கி இருக்கிறது.இத்தகைய வீரமும், விவேகமும் நிறைந்த மண் மீது படையெடுத்து, மாறுபட்ட வாழ்க்கை முறை, உடை, பெயர் என, அப்பாவி மக்களை மடை மாற்றி, மதம் பிடித்து அலையத் துவங்கினர், சில வெளிநாட்டு மன்னர்கள். இங்குள்ள மன்னர்களின் காமெடி வேற்றுமையை ஊதிப் பெரிதாக்கி, விரிசலை பிளவாக்கி அடிமைப்படுத்தி, 'டிவைடு அண்டு ரூல்' என ஆட்சி செய்து அலங்கோலப்படுத்தினர்.சுதந்திரம் வாங்குவதற்காக, மத அடிப்படையில் நம் நாடு பிரிக்கப்பட்டதும், தற்போதைய நிலை ஏற்பட்டுள்ளதும் வரலாறு. நம் கல்வி முறை, ஆட்சி முறை பாதம்தாங்கித்தனமாக அமைந்ததை என்னவென்று சொல்வது! மக்களும், வாயில்லா பூச்சிகளாக அதைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.இதுதான் 'மதச்சார்பின்மை - செக்யூலர்' என, 'இண்டியா' கூட்டணியினர் சொல்லி வருவது வேடிக்கை தான். எல்லாமே ஓட்டுக்காக தானே!இந்த ஓட்டு வங்கி அரசியல்வாதிகளுக்கு, செக்யூலர் என்றால் என்ன அர்த்தம் என்று கூட தெரியாதது தான் வருத்தமாக இருக்கிறது.பிரிட்டிஷ் அரசில், இரண்டு மையங்கள். ஒன்று பிரிட்டிஷ் அரசர்; மற்றொன்று, பிரிட்டிஷ் சர்ச்சுகளின் தலைவர். குற்றம் செய்த ஒருவரை, அந்த பிரிட்டிஷ் அரசர் தண்டிக்க நேரிட்டால், உடனே அவர், சர்ச்சில் பாதிரியாரிடம் மன்னிப்பு கேட்பார். உடனே அந்த பாதிரியார், அந்த குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்கி விடுமாறு அரசரிடம் சொல்வார்.

'செக்யூலரிசம்'

இந்த மாதிரி தொடர்ந்து நடந்தால், எப்படி நிர்வாகம் செய்ய முடியும்? சட்டம் - ஒழுங்குக்கு உட்பட்டு வாழ்க்கை நடத்துவோர், முட்டாள்கள் என்று ஆகிவிடாதா? எனவே, 'சர்ச் நிர்வாகம், அரசு நடவடிக்கைகளில் தலையிடக்கூடாது' என்ற ஒரு கோட்பாட்டை உண்டாக்கிக் கொண்டு, அதற்கு, 'செக்யூலரிசம்' என, பிரிட்டிஷார் பெயரிட்டனர். அதை அப்படியே காப்பி அடித்து தான் இங்கே நம் நாட்டில், ஒருபடி மேலே சென்று, அடுத்தவர் சமயத்தை மதித்து ஏற்றுக்கொள்ளுதல் என்ற நிலைக்கு மாறினோம். எனவே, எங்களை பின்னுக்கு இழுக்காதீர்கள்.மேலும், 'டெமாக்ரபி' என்று ஒரு பகுப்பாய்வு செய்தால், 1947ல் ஒருங்கிணைந்த இந்தியாவின் மக்கள் தொகை, 35 கோடி; அதில் 20 சதவீதம், அதாவது, 7 கோடி பேர் இஸ்லாமியர்கள். தற்பொழுது, பாரதம் - வங்கதேசம் - பாகிஸ்தான் மக்கள் தொகை, 185 கோடி இருக்கும்; அதில், இஸ்லாமியர்கள், 70 கோடிக்கு மேல் இருப்பர்.ஆக, ஏழு கோடி 10 மடங்காக பெருகி, 70 கோடியாகி விட்டது. ஆனால், 28 கோடி, நான்கு மடங்கு மட்டுமே அதிகரித்து, 115 கோடியில் நிலைகுத்தி நிற்கிறது.இதற்கு, 75 ஆண்டு காலமாக நம்மை ஆள்பவர்கள் பதில் சொல்வரா?இந்த செக்யூலர்வாதிகளுக்கும், அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும், சனாதன சமயத்தினருக்கும் ஒன்று புரிய வேண்டும். உலகில் இஸ்லாமிய நாடுகளும், கிறிஸ்துவ நாடுகளும் நுாற்றுக்கணக்கில் உள்ளன; சனாதன சமயத்தில் சாத்வீகமான வாழ்வு நடத்துபவர்களுக்கு, உலகில் உள்ள ஒரே நாடு இந்தியா தான்.பாகிஸ்தானின், வங்கதேசத்தின் ராணுவ அடக்குமுறை ஆட்சிக்கு, அவர்களின் இந்திய - ஹிந்து எதிர்ப்பு மற்றும் வெறுப்பு கொள்கை தான் காரணம்; அதே சமயம், துபாய், குவைத், சவுதி போன்ற இடங்களில் உள்ள இஸ்லாமியர்களுக்கும், நமக்கும் பிணக்கே கிடையாதே!இந்த ஒரு உண்மையை, இந்திய அரசியல்வாதிகளும், பொதுமக்களும் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.இனியும் ஓட்டு வங்கி அரசியல் செய்யாமல், உண்மையான மத சார்பு எனப்படும், மத ஏற்புத்தன்மை அரசியலை, அனைத்து கட்சிகளும் கைக்கொண்டால் தான் நம் நாட்டிற்கு நல்லது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Dharmavaan
அக் 15, 2024 08:43

ஹிந்து தேசமாகாததற்கு மூல காரணமே ஹிந்து துரோகிகள். பிரிவினைக்கு பிறகும் இங்கு முஸ்லிம்களை தங்க விட்டு தனி சலுகைகளை கொடுத்தது இந்த கேவலமான நிலைக்கு வந்தது


Sridhar
அக் 01, 2024 14:47

சீக்கிரமே பாரதத்தை ஹிந்து தேசம் என்று அறிவித்தால்தான் எல்லா பிரச்சனைகளும் ஒரு முடிவு வரும். மோடியால் செய்யமுடியவில்லை என்றால், யோகியோ சர்மாவோ செய்வார்கள். மதசார்பின்மை கூந்தல் பரத்துக்கு தேவையில்லாத ஆணி. காந்தி போன்ற போலி நபர்களால் உருவாக்கப்பட்டது.


நிக்கோல்தாம்சன்
செப் 26, 2024 06:01

இந்தியாவில் மதசார்பின்மை என்பது குதிரைக்கு கொம்பு உள்ளது போல , டெமாக்ரசி என்பது இன்னமும் கேலிக்கூத்தான விஷயம் , முதுகில் குத்துபவனுக்கும் , காட்டிக்கொடுப்பவனும் தான் மதசார்பின்மை என்று போர்வை போத்திக்கொள்வான்


kumar
செப் 18, 2024 20:05

என்ன வர வர,நீங்கள் உங்களுக்கே பேசிக்கொள்கிறீர்கள், தம்பி ?


kumaresan
செப் 13, 2024 14:14

சிறந்த கருத்து . இதைத்தான் காஞ்சி மஹானும் அன்று சொன்னார் . யார் சொல்கிறார்கள் என்பதை விட என்ன சொன்னார்கள் என்பது மிகவும் முக்க்கியமானது . மதத்தையும் அதன் நல்ல கருக்களையும் ஏற்றுக் கொண்டு அந்த மதம் சார்ந்த உயர்ந்த கருத்துக்களுக்களை வஞ்சமில்லாமல் பாராட்டுங்கள் கொண்டாடுங்கள் . ஒரு மதத்தவர் மற்ற மதத்தவரையும் மதத்தையும் முதலில் பாராட்டி ஏற்றுக் கொள்ளுங்கள். மத மாற்றம் செய்வதும் பாவம் தரும் செயல் . பெற்றோரை மாற்றுவது பாவம் இல்லயா ? உங்கள் முன்னோர்கள் பின்பற்றிய மதம் தான் உங்களுடைய மதம் . அதை உண்மையாக பின்பற்றுங்கள் . நம் நாட்டை பொறுத்தவரை அதுவே சிறந்த மார்க்கம். நன்றி


RAMAKRISHNAN NATESAN
செப் 07, 2024 01:17

மதச்சார்பின்மை என்பதே ஹிந்துக்களை ஏமாற்ற உருவான கான்செப்ட் ....


kantharvan
ஆக 28, 2024 17:20

தம்பி ஒரு மனுஷன் பொய் பேசலாம் அதுக்காக ஏக்கர் கணக்குல பேச கூடாது ...


spr
ஆக 26, 2024 14:36

"மத்சசார்பினை" என்றால் எந்தவொரு மதத்தையும் சாராதிருப்பது அதாவது அனைவரையும் சமமாக பாவிப்பது பாவித்தல் என்பது ஐம்புலன்களால் உணரக் கூடிய ஒரு இயல்பொருளை தனக்குப் பயன்படும் வகையில் ஆளுவதையே குறிக்கும் அரசாட்சி செய்வோர் எல்லா மதத்தவரையும் மதிக்க வேண்டும். சிறுபான்மையினரோ பெரும்பான்மையினரோ பொதுவாக ஒரு நாட்டின் சட்ட திட்டங்களுட்பட்டு செயற்படும் எந்தவொரு மதத்தவரின் மத்சசார்பான நடவடிக்கைகளிலும் தலையிடக் கூடாது. ஒரு பிரச்சினை என வந்தால், மதமா சட்டமா எதன்படி நடக்க வேண்டும் என்றால் சட்டமே இறுதியான கட்டுப்படுத்தும் அமைப்பு என்பதுதான் மதச்ச்சார்பின்மை. ஆனால் இந்துக்களின் ஒற்றுமையின்மை அரசியல் கட்சிகளை மதம் சாதி இவற்றால் ஒன்றுபடுத்தப்பட்ட சிறுபான்மையினர் பக்கம் இழுக்கிறது. தவறு மதச்ச்சார்பின்மை தவறாக அமுல்படுத்தப்பட அரசியல் ஆதாயம் கருதி பெரிதும் உதவுபவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்த அரசியல்வியாதிகளே


எஸ் எஸ்
ஆக 26, 2024 10:01

இதை எல்லாம் நமது அரசியல் கட்சி தலைவர்கள் நன்கு அறிவார்கள். ஆனால் சிறுபான்மை வாக்கு ஓட்டு நன்கு ஒருங்கிணைந்து விழுவதால் இந்துக்களின் முதுகில் குத்துகின்றனர். இதற்கு ஒரே வழி இந்துக்கள் மத உணர்வு (கவனிக்கவும் வெறி அல்ல) ஓட்டளித்தால் சிறுபான்மை வாக்காளர்களை தாஜா செய்யும் போக்கு ஒழியும். ஆனால் என்ன செய்வது? செக்யூலர்வாதிகளும் அறிவு ஜீவிகளும் இந்துக்களில்தான் உண்டு.


குமரன். தென்காசி
ஆக 26, 2024 07:51

நம் வாழ்க்கைக்கு நாமே பொறுப்பு ஓட்டுக்காக பிரித்தாளும் சூழ்ச்சியால் வஞ்சிக்கப்படுகிறோம் ஐந்து ஆண்டுகால கொடுமைகளை வெறும் ஐநூறுக்குள் நாம் திருப்தி அடைகிறோமே இதை என்னவென்று சொல்ல இன்னும் எத்தனை கிருஷ்ண பரமாத்மா உபதேசம் செய்ய வேண்டுமோ பூதகணங்கள் அரக்கர்கள் ராட்சசர்கள் மக்களை வதைத்தனர் என்று இதிகாசங்களில் படித்தோம் இன்று ஆட்சியாளர்கள் உருவில் பார்க்கிறோம் ஆக காமராஜர் கக்கன் ஜீவா ஓமந்தூரார் வஉசி வாஞ்சிநாதன் போன்றோர் மனசாட்சி உள்ளோருக்கு தெயவங்களே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை