உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் /  ஊழியர்களுக்கு சாதகமான புதிய தொழிலாளர் சட்டங்கள்

 ஊழியர்களுக்கு சாதகமான புதிய தொழிலாளர் சட்டங்கள்

நம் நாட்டில் பல ஆண்டுகளாக, மிக பழமையான தொழிலாளர் சட்டங்களே அமலில் இருந்தன. தற்போதைய தொழில் சூழல்களுக்கு ஏற்ற வகையில், தொழிலாளர் சட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 21ம் தேதி நாடு முழுதும் புதிய தொழிலாளர் சட்டங்களை, மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதன் வாயிலாக, 29 தொழிலாளர் சட்டங்கள் சுருக்கப்பட்டு, 'தொழிலாளர் ஊதிய சட்டம் 2019, தொழில்துறை தொடர்புகள் சட்டம் 2020, சமூக பாதுகாப்பு சட்டம் 2020, தொழில்முறை பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிட சூழல் சட்டம் 2020' என, நான்கு சட்டங்களாக நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த புதிய சட்டங்களில், 'அனைத்து ஊழியர்களுக்கும் கட்டாயமாக நியமன ஆணை வழங்க வேண்டும்; 10 பேருக்கு குறைவாக வேலை செய்யும் நிறுவனங்களுக்கும் ஈ.எஸ்.ஐ., வழங்கி, அதிக அளவிலான தொழிலாளர்களை காப்பீட்டின் கீழ் கொண்டு வர வேண்டும்; ஓராண்டில், 30 நாட்கள் மட்டுமே வேலை செய்திருந்தாலும், போனஸ் பெறும் உரிமை, 40 பேருக்கு மேல் பணியாற்றும் தொழிற்சாலைகளில் ஆண்டுதோறும் மருத்துவ பரிசோதனை; அனைத்து ஊழியர்களுக்கும் சரியான நேரத்தில் சம்பளம்' என்பது போன்ற விதிமுறைகள் இடம் பெற்றுள்ளன. அத்துடன், ஓராண்டு பணி முடித்தாலே பணிக்கொடை எனப்படும், 'கிராஜுவிட்டி' பெறும் உரிமை, நாடு தழுவிய அளவில் ஒரே மாதிரியான குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த மாற்றங்கள் எல்லாம், தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உயர்த்துவதுடன், தொழில் வளர்ச்சி, வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க உதவும் என நம்பப்படுகிறது. மேலும், பெண் தொழிலாளர்கள் பங்களிப்பை அதிகரிக்கவும், அமைப்புசாரா துறையில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களுக்கு, அனைத்து ஊதிய பலன்களும் கிடைக்கக்கூடிய வகையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும், 'புதிய தொழிலாளர் சட்டங்களில் இடம் பெற்றுள்ள சில விதிமுறைகள், தொழில் நிறுவனங்கள் ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது மட்டும் இல்லாமல், வேலையில் இருந்து நீக்குவதையும் எளிமையாக்கி இருக்கின்றன' என, தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. அத்துடன், 100 ஊழியர்களை கொண்டுள்ள நிறுவனங்கள் அல்லது ஆலைகள், தங்களின் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றாலோ அல்லது ஆலையை மூடுவது என்றாலோ, அரசின் அனுமதியை பெற வேண்டும் என்பது தற்போதைய விதிமுறை. புதிய சட்டங்களில், 100 என்பதை, 300 ஊழியர்களாக உயர்த்தி விட்டனர். அதனால், 300க்கும் அதிகமான ஊழியர்களை கொண்ட நிறுவனங்கள் மட்டுமே, இனி ஊழியர்கள் பணிநீக்கம் மற்றும் ஆலை மூடுவது போன்றவற்றுக்கு அரசின் அனுமதியை பெற வேண்டும். 300க்கும் குறைவாக ஊழியர்கள் உள்ள நிறுவனங்கள், அரசின் அனுமதியை பெற வேண்டிய அவசியம் இல்லை. இந்த விதிமுறையை தொழில் துறையினர் வரவேற்றுள்ள நிலையில், தொழிற்சங்கங்களோ, இது வேலை பாதுகாப்பை பலவீனப்படுத்தும் என்றும், நிறுவனங்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி இருப்பதாகவும் விமர்சித்துள்ளன. தொழிற்சங்கங்களுடனோ அல்லது அரசியல் கட்சிகளுடனோ விரிவாக ஆலோசிக்காமல், இந்த புதிய சட்டங்கள் அமலாகியுள்ளன. புதிய சட்டங்களில் மூன்று, கொரோனா தொற்று காலத்தில், பார்லிமென்டில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டவை. எனவே, தொழிலாளர்களின் கவலைகளை தீர்க்க, தொழிற்சங்கங்களுடன் அரசு ஆலோசிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை மத்திய அரசு கவனத்தில் கொள்ளும் என, நம்பலாம். இருப்பினும், புதிய தொழிலாளர் சட்ட திருத்தத்தில், தொழிலாளர்களுக்கு சாதகமான பல அம்சங்கள் உள்ளன என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதே நேரத்தில், தொழிலாளர்களுக்கு சலுகைகளை வழங்க, தொழில் நிறுவனங்கள் கூடுதல் நிதியை செலவிட நேரிடும். அத்தகைய புதிய சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் நிறுவனங்கள், தங்களை தயார்படுத்திக் கொள்ள முனைப்புடன் செயல்பட வேண்டியது அவ சியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ms Mahadevan Mahadevan
டிச 02, 2025 13:26

முதலாளிகளும் நேர்மையாக தொழில் செய்ய வேண்டும். தொதிலார்களும் நேர்மையாக உழைக்க வேண்டும். ஒருவரை ஒருவர் ஏமாற்ற கூடாது


Yasararafath
டிச 01, 2025 14:23

இந்த சட்டம் பெண்களுக்கு மட்டும் வழங்க கூடாது..அப்போதுதான் மன உளைச்சலில் பெண்கள் தற்கொலை செய்து கொள்வார்கள்.


Nathansamwi
டிச 01, 2025 11:08

இப்படி தான் UPS பென்ஷன் ஆஹா ஒஹோஒ னு சொன்னாங்க ...ஆனால் 1 சதவீத மத்திய அரசு பணியாளர்கள் மட்டும் தான் தேர்வு செஞ்சாங்க ....எப்படியும் புது தொழிலாளர் சட்டம் முதலாளிகளுக்கு தான் சாதகமா அரசு பன்னிருக்க போறாங்க ...


சிந்தனை
டிச 01, 2025 09:13

எல்லோரும் தொழிலாளர்களின் உரிமை என்று தான் பேசுகிறார்கள் தொழிலாளர்களின் கடமைகள் என்று யாருமே பேசுவதில்லை முதலாளிகள் என்றாலே ஏமாற்றுக்காரர்கள் என்ற கற்பனையை உருவாக்குகிறார்கள் ஆனால் தொழிலாளிகள் ஏமாற்றினால் அதை மூடி மறைக்கிறார்கள் அதனால் தொழிற்சாலைகள் எல்லாம் நஷ்டத்தில் இயங்குகின்றன குறிப்பாக அரசு ஊழியர்கள் பெரும்பாலும் 99 சதவீதம் பேர் வேலை செய்யாமல் பெரிய சம்பளம் வாங்குவதை பார்த்துவிட்டு இன்று தனியார் ஊழியர்களும் அப்படி ஆகிக்கொண்டு இருக்கிறார்கள் அதனால் நாட்டிற்கு மிகப்பெரிய கேடு நடக்கிறது அதனால் இதில் முதலில் திருத்தப்பட வேண்டியது அரசு ஊழியர்கள் கடமை உணர்ச்சியுடன் வேலை செய்ய வேண்டும் என்பதுதான் பிறகுதான் அது தனியார் நிறுவனங்களிலும் வர முடியும்


oviya vijay
டிச 01, 2025 07:23

அரசியல் என்று என்னமோ தீய மூ கா விற்கு மட்டும் அந்த உரிமை உள்ளது போல உதார் விட்டார். தொழில் சாலையில் அரசியல்க்கு என்ன வேலை? அனைத்து தொழில் சங்கங்களையும் தடை செய்ய வேண்டும்


அப்பாவி
டிச 01, 2025 07:01

ரெண்டு கோடி வேலை குடுத்திட்டோம்னு பெருமிதப் பட முடியலை..


vivek
டிச 01, 2025 18:13

உனக்கு எல்லாமே ஓசியில் வேணும் அப்புசாமி...என்ன செய்ய


சமீபத்திய செய்தி