வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இங்க நீங்க என்னதான் சொன்னாலும் நாளைக்கு நாங்க அத மறந்துட்டு அடுத்த வேலையைப் பார்க்க போயிடுவோம்.
இப்போதெல்லாம் சரக்கு அடிக்காமல் ஓட்டும் டிரைவர்கள் மிக மிக கம்மி - அபூர்வம் , தனியார் பேருந்து டிரைவர்கள் , மினிபஸ் டிரைவர்கள் , மினி - லாரி பெரிய லாரி , தனியார் நிறுவன , பள்ளிகள் கல்லூரி டிரைவர்கள் எல்லாம் சரக்கு அடிக்காமல் வண்டியை தொட மாட்டார்கள் . . . முன்பு சரக்கு அடித்தால் வண்டியை தொட மாட்டார்கள் . . . இப்போ எல்லாம் தலைகீழ் . . . கேள்வி கேட்க ஆளில்லை . . கேட்க வேண்டிய காவல்துறையும் போதையிலேயே ஆடுகிறது . . .
ஏசி பஸ்களில் ஜன்னல் கண்ணாடிகளை பயணிகள் திறக்க முடியாதபடி அமைப்பதே எந்த அசம்பாவிதம் நடந்தாலும் பயணிகள் உடனடியாக வெளியேற முடியாத படி சிக்கி கொள்கின்றனர் , அதோடு. , ஜன்னல்களை திறக்க முடியாதபடி இருப்பதால் தீ- புகையும் வெளியேறமுடியாத படி மூச்சடைக்க வைத்து முழுவதும் எரிந்து போக செய்கிறது , ரயில் ஏசி பெட்டிகளிலும் அப்படியே உள்ளது . . பயணிகள் தாங்களாகவே திறக்குமாறு அமைத்து ஆபத்து காலங்களில் மட்டும் திறக்க வேண்டும் என்று எழுதி வைக்கலாம் ,
விபத்து நேரத்தில் தப்பிக்க யாருக்கும் வழி தெரிவதில்லை. விமானத்தில் சொல்வது போல் அவசர கால வழியை எப்படி பயன் படுத்துவது என பஸ் கிளம்பும் முன் யாரும் சொல்லித் தருவதும் இல்லை. ஆம்னி பஸ்களின் வேகத்தைக் குறைத்தாலே பெருமளவு விபத்துகள் இங்கு குறையும்.
Yes, the safety instructions/awareness session needs to be given by drivers to the passengers on every trip. The bus owners / the organisation must check the alcohol level, and it needs to be recorded. The camera must be installed in the cabin and body camera to be with the driver. The IVMS monitor needs to be installed in each vehicle, and records must be maintained.
30 ஆண்டுகளுக்கு முன்னெல்லாம் அனைத்து இரவு பஸ்களிலும் இரண்டு டிரைவர்கள் இருப்பார்கள், ஷிப்டு முறையில் ஓட்டுவார்கள். இப்போது ஒரே டிரைவர்தான்.
பெருநகரங்கட்கு எத்தனை ரயில், பஸ் சேவை இருந்தாலும் போதவில்லை. அரசாங்கத்திடம் பஸ்வாங்க போதிய பணம் இல்லை. ஆம்னி பஸ் காலத்தின் கட்டாயம். எந்த ஆம்னி பஸ் முதலாளியும் லோன் இல்லாமல் வாங்குவதில்லை. டிரைவர் சம்பளம், பராமரிப்பு செலவு, இன்ஸூரன்ஸ், ஆளும் கட்சிக்கு பர்மிட் வாங்க வாய்க்கரிசி இத்தியாதி. இந்த லட்சணத்தில் கட்டணத்தை எந்த அரசியல்வாதியாலும் ஒழுங்கு படுத்துவது இயலாத ஒன்று. ரயில் புக்கிங் தொடங்கிய சிலமணி நேரத்திலேயே ஓவர். என்னதான் செய்வது. பண்டிகை சமயத்தில் சொந்த உருக்கு போய் திரும்ப லீவு போடாமல் வர மிகுந்த அதிர்ஷ்டம் தேவை. எளிதில் தீப்பற்றும் பொருட்களை தடை செய்தாலும் பொறுப்பே இல்லாமல் நடந்து கொள்கிறார்கள். பாவம் ஆம்னி பஸ் முதலாளிகள்.
எவ்வளவோ விதிமீறல்கள் இருந்தாலும் மக்கள் சேவையை கருத்தில்கொண்டு எப்பொழுதும் ஒரே நிரந்தரமான கட்டணத்தில், சீரான வேகத்தில் மக்களுக்கு சேவையளிக்கும் சில நிறுவனங்கள் இன்றும் இருந்துகொண்டிருக்கின்றன. அந்த நிறுவனங்களுக்கு மக்களின் பேராதரவு தொடர்ந்து இருந்துகொண்டுள்ளது. நேர்மாறாக பல நிறுவனங்கள் நடந்துகொண்டுள்ளன. பேருந்துகள் அந்தந்த மாநிலங்களில் பதிவுசெய்யாமல் இயக்கப்படுவது அனைத்து அதிகாரிகளுக்கும் தெரிந்துதான் நடக்கின்றது. எந்தெந்த காலங்களில் எவ்வளவு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன என்பதும் ஆன்லைன் தளங்களில் இருப்பதும் அனைத்து அதிகாரிகளுக்கும் தெரியும். பேருந்துகள் குறித்த நேரத்தில் புறப்பட்டு சீரான வேகத்தில் இயக்கப்படுவதில்லை என்பதும் அதிகாரிகளுக்கு தெரியும். பயணியர் பேருந்தில் அனைத்துவிதமான பார்சல்களும் எடுத்து சொல்லப்படுவதும் அதிகாரிகளுக்கும் தெரியும். அவற்றில் எந்தவிதமான அபாயகரமான மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் உள்ளன என்பது விபத்து நடக்கும்வரை யாருக்கும் தெரியாது. இவைகளை இன்னும் எத்தனை விபத்துக்கள் நடந்தபிறகுதான் அரசு முறைப்படுத்துமென்பது தெரியவில்லை.