குவைத்தில் பொறியாளர் தின சிறப்பு நிகழ்ச்சி
குவைத்தில் பொறியாளர் தின சிறப்பு நிகழ்ச்சிகுவைத் : குவைத்தில் 58வது பொறியாளர் தின சிறப்பு நிகழ்ச்சி இந்திய பொறியாளர் சங்கத்தின் குவைத் பிரிவு சார்பில் நடந்தது.நிகழ்ச்சியில் இந்திய தூதர் பரமிதா திரிபாதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.அவர் இந்திய பொறியாளர்களின் சிறப்பான பங்களிப்பு குறித்து பெருமிதம் தெரிவித்தார். பொறியாளர்கள் இந்தியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் பாலமாக இருந்து வருகின்றனர் என்றார்.குவைத் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.--- குவைத்தில் இருந்து நமது வாசகர் பிரகாஷ்