இஸ்ரேலில் இந்திய சுதந்திர தின விழா
டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டின் தலைநகர் டெல் அவிவ் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்தியாவின் 79வது சுதந்திர தினம் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்திய தூதர் ஜே.பி. சிங் இந்தியாவின் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, இந்திய குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரையை வாசித்தார். விழாவில் இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட இந்திய சமூகத்தினர் பலர் பங்கேற்றனர். - நமது செய்தியாளர் காஹிலா