கத்தாரில் இந்திய சுதந்திர தின விழா
தோஹா : கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் உள்ளஇந்திய தூதரகத்தில் இந்தியாவின் 79 வது சுதந்திர தின விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இந்திய தூதர் விபுல் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் இந்திய குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரையில் இருந்து முக்கிய பகுதிகளைவாசித்தார். இந்தியாவின் கலை மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடந்தது.இந்திய சமூகத்தினர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.-- நமது செய்தியாளர், காஹிலா .