உள்ளூர் செய்திகள்

பஹ்ரைனில் இந்தியாவின் 79வது சுதந்திர தின விழா

பஹ்ரைன்; பஹ்ரைன் இந்திய தூதரகத்தில் இந்தியாவின் 79வது சுதந்திர தினம்மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்திய தூதர் வினோத் கே. ஜேக்கப் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் இந்திய ஜனாதிபதியின் சுதந்திர தின உரையிலிருந்து முக்கிய பகுதிகளை தூதர் வாசித்தார்.இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் வகையில் கண்கவர் நடன நிகழ்ச்சிகள் நடந்தது.இந்திய தேசிய கொடியின் வரலாற்றை விளக்கும் புகைப்பட கண்காட்சியும் நடந்தது.இந்த நிகழ்ச்சியில் தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.--- நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !