பஹ்ரைனில் தொழிலாளர் குறைதீர்க்கும் நிகழ்ச்சி
பஹ்ரைன்: பஹ்ரைனில் இந்திய தூதரகத்தின் சார்பில் தொழிலாளர் குறைதீர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் வினோத் கே ஜேக்கப் தலைமை வகித்தார். சம்பளம் வழங்கப்படாதது, கல்வி உதவி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தூதரக அதிகாரிகள் தேவையான ஆலோசனைகளை வழங்கினர். - நமது செய்தியாளர் காஹிலா