பஹ்ரைன் இந்திய தூதரகத்துக்கு பள்ளிக்கூட மாணவர்கள் வருகை
பஹ்ரைன் இந்திய தூதரகத்துக்கு பள்ளிக்கூட மாணவர்கள் வருகைபஹ்ரைன்: பஹ்ரைன் இந்திய தூதரகத்துக்கு ஒவ்வொரு மாதமும் பள்ளிக்கூட மாணவ, மாணவியர் பார்வையிட வருவது வழக்கம்.இந்த மாதம் ஹமத் டவுண் பள்ளிக்கூட மாணவர்கள் வந்தனர். அவர்களை தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.அதன் பின்னர் இந்திய தூதர் வினோத் கே. ஜேக்கப் உடன் சந்தித்து பேசினர். அப்போது இந்தியா குறித்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.பின்னர் மாணவர்கள் தூதரகத்தின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டனர். மேலும் இந்தியாவின் முக்கிய சுற்றுலா தலங்கள் குறித்தும் விவரிக்கப்பட்டது.காந்தியடிகள் சிலை முன்பு மாணவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.- பஹ்ரைனில் இருந்து நமது தினமலர் வாசகர் ஹனீஃப்